இசுட்டெபானெசு வெர்சுலசு

இசுட்டெபானெசு வெர்சுலசு (Staphanus Versluys), ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில், 1729 ஆம் ஆண்டு முதல் 1732 வரை இலங்கையின் ஆளுனராக இருந்தார். கொடுங்கோல் ஆட்சி நடத்தி இறுதியில் மரணதண்டனை பெற்ற ஆளுனர் பேட்ரசு வைஸ்டுக்குப் பின்னர் இவர் பதவியேற்றார். இவரும் மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு செயலாற்றவில்லை. அதிக இலாபம் பெறும் பேராசை காரணமாக, சாதாரண மக்களால் வாங்குவதற்கு முடியாதபடி அரிசியின் விலையை உயர்த்தியதால், செயற்கையாகவே நாட்டில் பஞ்சத்தை உருவாக்கினார்.

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.