அதங்கோடு
அதங்கோடு (Athencode) குமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் விளவங்கோடு வட்டத்தில் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளது.[3] தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் பிறந்தது இவ்வூர் ஆகும். இவ்வூரின் வடக்கே கருப்பட்டியாலுமூட்டி, தெற்கே முளமூட்டுக்கடவு, கிழக்கே மடிச்சல், மேற்கே மணக்காலை ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன. இவ்வூரை ஒட்டி தாமிரபரணி ஆறு பாய்கிறது. இந்த ஆறு, அதங்கோட்டில் அஞ்சாலி கடவு முதல் ளமூட்டுக்கடவு , செங்கிலாகம் கடவு , நொத்தோலி கயம் (மண்ணடிக்கடவு), ஆலஞ்சாலி கடவு மற்றும் குந்திரிமூட்டுக்கயம் வரை வடக்கு தெற்காக பாய்கிறது. இங்குள்ள ஆனந்தநகரில் பழமை வாய்ந்த மாயா கிருசுணசாமி கோயில் அமைந்துள்ளது.
அதங்கோடு | |
அமைவிடம் | 8°18′N 77°10′E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | பிரசாந்த் எம். வாட்னிரே, இ. ஆ. ப. |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "அதங்கோட்டின் அமைவிடம்".
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.