அசோகா (2008 திரைப்படம்)
அசோகா (Ashoka) என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் பிரேம் மேனன் மற்றும் ரகுவரன் நடிப்பில் வெளிவந்த, இந்திய பிரதமரை பாதுகாக்கும் மெய்காப்பாளரை பற்றிய கதையாகும். இந்த படம் வெளிநாட்டு வாழ் இந்தியா் பிரேம் மேனனின் இயக்கம் மற்றும் தயாாிப்பில் வெளியானது. இத்திரைப்படத்திற்கு சபேஷ் முரளி இசையமைத்துள்ளார்.[1]
அசோகா | |
---|---|
இயக்கம் | பிரேம் மேனன் |
தயாரிப்பு | பிரேம் மேனன் |
இசை | சபேஷ் முரளி |
நடிப்பு | பிரேம் மேனன் ரகுவரன் லிவிங்ஸ்டன் அனுஶ்ரீ பூஜா பாரதி ஆனந்த ராஜ் |
வெளியீடு | பெப்ரவரி 1, 2008 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச் சுறுக்கம்
இந்த படத்தில் பிரேம் மேனன் தேசிய பாதுகாப்பு காவற்படையில், நாட்டின் பிரதமரை பாதுகாக்கும் அதிகாாியாக வருவாா். கோயம்புத்தூா் விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதலில் இருந்து பிரதமாின் உயிரை காப்பாற்றுவதாக படம் ஆரம்பமாகும். அசோகா பிரதமரை காப்பற்றிய பிறகு, மருத்துவா் சொல்வாா் பிரதமா் பிழைத்து கொண்டாா், ஆனால் அவருக்கு இதயம் வலது பக்கம் உள்ளது என்றும் இது ஒரு அாிய தோற்றம் என்றும் கூறுவாா். அசோகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரதமரை எப்படி காப்பாற்றுவாா் என்பது மீதமுள்ள படத்தின் கதையாகும்.
தயாாிப்பு
2004 இல் ஆரம்பிக்கப்பட்ட இப்படமானது, நான்கு ஆண்டுகள் கழித்து 2008 இல் வெளியானது.[2]