அகப்பாட்டு வண்ணம்
வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.
அகப்பாட்டு வண்ணம் என்பது செய்யுளில் பொருள் முடிவைச் சொல்லாமல் பொருள் முடிவை முடித்துவைக்கும்.
- நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
- உயிர்க்கிறுதி ஆகி விடும் [1]
தாங்கும் வலிமையை உணரவேண்டும் என்பது புலப்படுமாறு நின்று பொருள் முடிந்து வைக்கப்பட்டுள்ளது.
அடிக்குறிப்பு
- திருக்குறள் 476
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.