2013 பாட்னா தொடர் குண்டுவெடிப்புகள்

2013-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் நாள் , இந்தியாவின் பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் எட்டு இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இதில் 5 பேர் பலியாயினர் மற்றும் 66 பேர் காயமுற்றனர்.[1][2][3] இந்த குண்டுவெடிப்புகளுக்கு எவரும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை[4]

2013 பாட்னா தொடர் குண்டுவெடிப்புகள்
நிகழ்விடம்பாட்னா,பீகார், இந்தியா
நாள்27 அக்டோபர் 2013 (UTC+05:30)
ஆயுதம்(ங்கள்)8 நாட்டு வெடிகுண்டுகள்[1]
இறப்பு(கள்)5[1]
காயமடைந்தவர்66[1]


பாட்னா தொடர்வண்டி நிலையம் குண்டுவெடிப்புக்கள்

27 அக்டோபர் அன்று பாட்னா தொடர்வண்டி நிலையத்தின் பத்தாவது நடைமேடையில் ஓர் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். மேலும் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்கப்பட்டன[5].

காந்தி மைதான் குண்டு வெடிப்புகள்

காந்தி மைதானில் நடைபெற்ற நரேந்திர மோடியின் தேர்தல் பேரணியில் ஐந்து குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்[5] . இந்த மைதானத்திற்கு அருகே இருந்த திரையரங்கில் வெடித்த குண்டில் ஆறு பேர் காயமடைந்தனர்[6]. மோடி அவர்கள் பேசிய மேடையின் கீழ் வெடிக்காத குண்டு ஒன்று கைபெற்றபட்டது. மாலை ஐந்து மணி அளவில் மைதானத்தில் ஓர் குப்பை மேட்டின் கீழே மேலும் ஒரு குண்டு வெடித்தது. [1]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.