மே 2014 சென்னை மத்திய தொடர்வண்டி நிலைய குண்டுவெடிப்பு
2014இல் மே 1 அன்று, காலை 7:15 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9ஆம் நடைமேடையில் குண்டு வெடித்தது.[1][2]இந்த நடைமேடையில் குவகாத்தி-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபொழுது குண்டுவெடித்தது. இதன் காரணமாக 24 வயது சுவாதி என்ற பெண் பயணி பலியானார்; 16 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
மே 2014 சென்னை குண்டுவெடிப்பு | |
---|---|
இடம் | சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
நாள் | 1 மே 2014 07:15 இசீநே (ஒசநே+05:30) |
தாக்குதல் வகை | குண்டுவெடிப்பு |
இறப்பு(கள்) | 1 |
காயமடைந்தோர் | 30+ |
புலனாய்வு
- இந்த குண்டுவெடிப்பினை சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்று விசாரிக்குமென தமிழகக் காவல்துறை டி. ஜி. பி. கே. இராமனுஜம் தெரிவித்தார்.[3]
மேற்கோள்கள்
- "சென்னை சென்ட்ரலில் பயங்கரம்: 2 குண்டுகள் வெடித்து பெண் பலி". தி இந்து (தமிழ்). பார்த்த நாள் ஏப்ரல் 2, 2014.
- Woman killed in twin blasts at Chennai Central station - தி இந்து (ஆங்கிலம்)
- Special team to probe blast: Tamil Nadu police chief - தி இந்து (ஆங்கிலம்)
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.