ஸ்ரீஹரிக்கோட்டா
ஸ்ரீஹரிக்கோட்டா (தெலுங்கு: శ్రీహరికోట) வங்காள விரிகுடா கரையோரம் இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ள மணல் தீவு ஆகும். சென்னையிலிருந்து 80 கிமீ தொலைவில் அமைந்துள்ள இங்கு இந்தியாவின் ஒரே விண்கல ஏவு நிலையமான சதீஸ் தவான் விண்வெளி மையம் உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் தன் விண்கலங்களை இங்கிருந்து ஏவுகிறது. 2008 அக்டோபர் 22 இல் சந்திரயான்-1 இங்கிருந்து ஏவப்பட்டது.
சிறி ஹரிக்கோட்டா శ్రీహరికోట
| |
— நகரம் — | |
![]() ![]() ![]() சிறி ஹரிக்கோட்டா
శ్రీహరికోట
శ్రీహరికోట
| |
அமைவிடம் | 13°43′04″N 80°12′00″E |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | நெல்லூர் |
ஆளுநர் | ஈ. சீ. இ. நரசிம்மன்[1] |
முதலமைச்சர் | நா. சந்திரபாபு நாயுடு[2] |
நகராட்சித் தலைவர் | |
மொழிகள் | தெலுங்கு
|
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
ஸ்ரீஹரிக்கோட்டா, பழவேற்காடு ஏரியை வங்காள விரிகுடாவிலிருந்து பிரிக்கிறது. ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தைச் சார்ந்த புலிக்காடு நகரம் இத்தீவிலுள்ளது. அருகிலுள்ள நகரான சூலூர் பேட்டை 20 கிமீ தொலைவிலுள்ளது. இங்கு தொடர் வண்டி நிலையம் உள்ளது. சூலூர் பேட்டை சென்னையுடன் தேசிய நெடுஞ்சாலை 5 ஆல் இணைக்கப்பட்டுள்ளது.