அலெக்சாந்தர் பூஷ்கின்

அலெக்சாந்தர் செர்கேயெவிச் பூஷ்கின் (Aleksandr Sergeyevich Pushkin,[1] உருசியம்: Алекса́ндр Серге́евич Пу́шкин, சூன் 6 [யூ.நா. மே 26] 1799 - பெப்ரவரி 10 [யூ.நா. சனவரி 29] 1837) உருசிய மொழியின் ஒரு சிறந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர்.[2] மிகப்பெரிய கவிஞராக பலரால் கருதப்படும் இவர் நவீன உருசிய இலக்கியத்தின் நிறுவனர்.

அலெக்சாந்தர் பூஷ்கின்

ஓரெஸ்டு கிப்ரீன்சுக்கி 1827 இல் வரைந்த பூஷ்கினின் ஓவியம்
பிறப்பு அலெக்சாந்தர் செர்கேயெவிச் பூஷ்கின்
சூன் 6, 1799(1799-06-06)
மாஸ்கோ, உருசியப் பேரரசு
இறப்பு 10 பெப்ரவரி 1837(1837-02-10) (அகவை 37)
சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியப் பேரரசு
தொழில் கவிஞர், புதின, நாடக எழுத்தாளர்
நாடு உருசியர்
எழுதிய காலம் உருசிய இலக்கியத்தின் பொற்காலம்
இலக்கிய வகை புதினம், கவிதைகள், நாடகம், சிறுகதை, தேவதைக் கதை
இயக்கம் புனைவியம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
இயூஜின் ஒனேகின், காப்டனின் மகள், போரிசு கோதுனோவ், ருசுலானும் லுத்மீலாவும்
துணைவர்(கள்) நத்தாலியா பூஷ்கினா (1831–1837)
பிள்ளைகள் மரியா, அலெக்சாந்தர், கிரிகோரி, நத்தாலியா
உறவினர்(கள்) செர்கே பூச்கின், நதியெஸ்தா கன்னிபெல்
கையொப்பம்

பூஷ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார். அத்துடன் ரஷ்ய இலக்கியத்தில் ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாங்கையும் உருவாக்கியிருந்தார். இவை முன்னெப்போதுமில்லாத அளவில் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தின.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.