ஷா ஆலாம்
ஷா ஆலாம் (Shah Alam) மலேசியாவில் நவீனமாக வடிவு அமைக்கப்பட்ட ஒரு புதிய நகரம். இந்த நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் தலைப் பட்டணம் ஆகும். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 25 கி.மீ அல்லது 16 மைல்கள் மேற்கே அமைந்து உள்ளது. 1974ஆம் ஆண்டு கூட்டரசு பிரதேசமாக கோலாலம்பூர் அறிவிக்கப்பட்டது. அதுவரை கோலாலம்பூர் நகரம், சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாகவும், மலேசியாவின் தலைநகரமாகவும் விளங்கி வந்தது.
ஷா ஆலாம் Shah Alam 沙阿蘭 | ||
---|---|---|
மாநிலத் தலைநகரம் | ||
| ||
அடைபெயர்(கள்): மந்தாரை நகரம் Bandar Anggerik, Orchid City | ||
குறிக்கோளுரை: இண்டா பெஸ்தாரி Indah Bestari அழகிய அறிவார்ந்த | ||
![]() சிலாங்கூர் மாநிலத்தின் பெட்டாலிங் மாவட்டத்தில் ஷா ஆலாம் அமைவிடம் | ||
நாடு | மலேசியா | |
மாநிலம் | சிலாங்கூர் | |
அமைவு | 1963 | |
மாநிலத் தலைநகர் அந்தஸ்து | 7 டிசம்பர் 1978 | |
அரசு | ||
• நகர முதல்வர் (மேயர்) | முகமட் ஜாபார் முகமட் அதான் | |
பரப்பளவு | ||
• மொத்தம் | [ | |
மக்கள்தொகை (2010) | ||
• மொத்தம் | 5,41,306 | |
நேர வலயம் | MST (ஒசநே+8) | |
• கோடை (பசேநே) | கண்காணிப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது (ஒசநே) | |
இணையதளம் | http://www.mbsa.gov.my |
அதன் பின்னர், 1978இல் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக ஷா ஆலாம் பிரகடனம் செய்யப்பட்டது. மலேசியாவில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரங்களில் ஷா ஆலாம் முதல் நகரமாகப் புகழ் பெறுகிறது. இந்த நகரத்தின் சாலைகள், கட்டிடங்கள், அரசாங்க அலுவலகங்கள், மக்கள் குடியிருப்பு அடுக்குமாடிக் கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், பூங்காக்கள், வணிகத் தளங்கள், மருத்துவ மையங்கள், பொழுது போக்கு மையங்கள் அனைத்துமே திட்டமிடப்பட்டு மிக நவீனமாக, உருவாக்கப்பட்டுள்ளன.
வரலாறு
1957ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம் அடைந்தது. மலேசியாவின் ’’நவீனமயத் தந்தை” என்று அழைக்கப்படும் துன் அப்துல் ரசாக் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் மலேசியா மிகத் துரிதமான வளர்ச்சியை அடைந்தது. துன் அப்துல் ரசாக் மலேசியாவின் இரண்டாவது பிரதமர் ஆவார்.[1]
ஷா ஆலாமின் பழைய பெயர் சுங்கை ரெங்கம். 19ஆம் நுற்றாண்டில் அதன் சுற்றுப் பகுதிகளில் பல ரப்பர், செம்பனை தோட்டங்கள் இருந்தன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் அந்தத் தோட்டங்களில் வேலை செய்தனர். பின்னர் சுங்கை ரெங்கம் எனும் பெயரில் இருந்த அந்தப் பகுதி பத்து தீகா என்று மறுபெயர் பெற்றது.
சுங்கை ரெங்கம்
1963ஆம் ஆண்டு பத்து தீகா பகுதியில் இருந்த சுங்கை ரெங்கம் ரப்பர் தோட்டத்தில் ஒரு புதிய நகரை உருவாக்குவது என சிலாங்கூர் மாநில அரசாங்கம் முடிவு செய்தது. ஐக்கிய நாட்டு சபையைச் சேர்ந்த நகரத் திட்ட அமைப்பாளர் வி. அந்தோலிக் என்பவர் புதிய நகருக்கு அந்த இடத்தைத் தேர்வு செய்யும்படி சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்தார். புதிய நகரப் பகுதி கோலாலம்பூருக்கும், கிள்ளான் துறைமுகத்திற்கும் நடுமையத்தில் இருந்தது.[2]
முன்பு சிலாங்கூர் மாநிலத்திற்ன் சுல்தானாக இருந்த சுல்தான் ஹிஷாமுடின் ஆலாம் ஷா என்பவரின் பெயரில் புதிய நகருக்கு ஷா ஆலாம் என்று பெயர் சூட்டப்பட்டது. சிலாங்கூரில் பல நினைவுச் சின்னங்கள், கட்டிடங்கள், சாலைகளுக்கு சுல்தான் ஹிஷாமுடின் ஆலாம் ஷாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தின் நிர்வாக மையம்
1974 பிப்ரவரி மாதம் முதல் தேதி கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசமாக அறிவிக்கப்பட்டதும், சிலாங்கூர் மாநிலத்தின் நிர்வாக மையமாக ஷா ஆலாம் மாற்றம் கண்டது. பின்னர் 1978 டிசம்பர் 7ஆம் தேதி ஷா ஆலாம் அதிகாரப்பூர்வமாக சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
- Before 1963, Shah Alam was known as Sungai Renggam and was a palm oil plantation which was situated between Petaling Jaya and Bandar Diraja Klang
- "Official Portal of Shah Alam City Council – History". mbsa.gov.my (2012-04-20). பார்த்த நாள் 2012-04-20.