வி. சாந்தா
மருத்துவர் வி. சாந்தா (Dr. V. Shanta, பிறப்பு: மார்ச் 11, 1927) இந்தியாவின் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர். இவர் சென்னை அடையாறு புற்றுநோய்க் கழகத்தின் தலைவராகப் பணியாற்றுகிறார். இவர் மக்சேசே விருது, பத்மசிறீ, பத்ம விபூசண் போன்ற புகழ்பெற்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.
அடையாறு புற்றுநோய்க் கழகத்தில் 1955 ஆம் ஆண்டில் பணியில் இணைந்த இவர், அதில் பல முக்கிய பதவிகளில் பணியாற்றினார். 1980 முதல் 1997 வரை அதன் இயக்குனராகப் பணியாற்றினார். உலக சுகாதார அமைப்பில் சுகாதாரம் குறித்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
சென்னையில் மைலாப்பூரில் பிறந்தவர் சாந்தா. பி. எஸ். சிவசாமி பெண்கள் உயர் பள்ளியில் கல்வி கற்ற இவர் 1949 இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பட்டம் பெற்றார். 1955 இல் எம்.டி பட்டம் பெற்றார்.
படைப்புக்கள்
- My Journey, Memories, V Shanta எனும் நூல், தமிழில் பத்மநாராயணன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது [1].
விருதுகள்
- மக்சேசே விருது (2005)
- பத்மசிறீ (1986)[2]
- பத்ம பூசண் (2006)[2]
- நாயுடம்மா நினைவு விருது, 2010[3]
- தமிழக அரசின் ஔவையார் விருது, 2013[4]
- பத்ம விபூசண் [5]
மேற்கோள்கள்
- http://www.thehindu.com/books/books-reviews/the-emperor-can-be-killed/article4428898.ece
- "Padma Awards Directory (1954-2013)". MINISTRY OF HOME AFFAIRS.
- Nayudamma award for Dr. Shanta, த இந்து, பெப்ரவரி 20, 2011
- தமிழ்நாடு அரசின் செய்திவெளியீடு எண்:150, நாள்: 07-03-2013
- "Padma Awards 2016". Press Information Bureau. பார்த்த நாள் 25 சனவரி 2016.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.