வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் திருக்கோயில், சேலம்

வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் திருக்கோயில்,' சேலம் ஆத்தூர் என்னும் வடசென்னிமலை என்ன்னும் குன்றின் மேல் அமைந்துள்ளது.

வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் திருக்கோயில், சேலம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ் நாடு
மாவட்டம்:சேலம் மாவட்டம்
அமைவு:வட சென்னிமலை , ஆத்தூர் சேலம்
கோயில் தகவல்கள்
மூலவர்:பாலசுப்பிரமணியர், முருகன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென் இந்தியா, கோயில்கள்


திருவிழா

இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது. பங்குனி உத்திரத் தேர் திருவிழா நடைபெற்ற இரண்டாம் நாள் சத்தாபரம் விழா நடைபெறும். அப்போது முருகப்பெருமான், வள்ளி மற்றும் தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக வலம் வரும் போது பலவகையான வானவெடிகள் வெடிக்கப்படும். இந்த வானவேடிக்கையை காணச் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராமங்களில் இருந்து பெருவாரியான மக்கள் வருகின்றனர்

மேலும் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர். ஆகிய விழா நாட்களில் உற்சவங்கள் நடக்கிறது.

திறக்கும் நேரம்

காலை 8 மணி முதல் 12.00மணி வரை,மாலை 5 மணி முதல் இரவு 8.00மணி வரை திறந்திருக்கும்.

பிரார்த்தனை

நேர்த்திக்கடன்

வேண்டுதல் நிறைவேறியதும் முருகனுக்கு திருமுழுக்கு செய்தும், புது ஆடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.