மூன்றாம் பால்

மூன்றாம் பால் உடல் உறுப்புகளால் ஒரு பால் ஆகவும் உணர்வால் எதிர்பாலாகவும் தம்மை உணர்வோரை அடையாளப்படுத்துவோரை குறிப்பிடும் சொல் ஆகும். பிறப்பால் ஆண்களாக அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்கள் திருநங்கைகள் எனப்படுகின்றனர். அவ்வாறே பிறப்பால் பெண்களாக அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை ஆண்களாக உணர்ந்து ஆணகளாக வாழ் முற்படுவோர் திருநம்பி எனப்படுவர்.

தமிழ்நாடு அரசு மூன்றாம் பாலினத்தாரை தற்போது அங்கீகரிக்க தொடங்கி உள்ளது. அவர்கள் அடையாள அட்டை, மற்றும் இதர சேவைகளைப் பெற மூன்றாம் பால் என தம்மை அடையாளப்படுத்துவதை தமிழ்நாடு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியாவில் இது ஒரு முக்கிய அரசியல் சமூக மாற்றமாக பார்க்கபபடுகிறது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.