முள்ளும் மலரும்
முள்ளும் மலரும் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மகேந்திரன் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் [1][2][3] கல்கி இதழில் தொடர் கதையாக உமாசந்திரன் எழுதிய முள்ளும் மலரும் நாவலின் கதையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது. 1967 ஆம் ஆண்டு கல்கி இதழின் வெள்ளி விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல் முள்ளும் மலரும். இப்படத்தில் ரஜினிகாந்த், ஷோபா ஆகியோர் நடித்தனர். முக்கிய வேடத்தில் சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி நடித்தனர். இளையராஜா இசையமைத்தார். ஒளிப்பதிவு செய்தவர் பாலுமகேந்திரா.
முள்ளும் மலரும் | |
---|---|
![]() | |
இயக்கம் | மகேந்திரன் |
கதை | உமாசந்திரன் எழுதிய முள்ளும் மலரும் என்ற புத்தகத்தின் அடிப்படை |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, சரத்பாபு |
வெளியீடு | 1978 |
நீளம் | 143 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆதாரங்கள்
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.