மு. கணபதிப்பிள்ளை

தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை இலங்கைத் தமிழ்ப் பண்டிதரும், தமிழறிஞரும் எழுத்தாளரும் ஆவார்.

மு. கணபதிப்பிள்ளை
தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
பிறப்புமு. கணபதிப்பிள்ளை
புலோலி, யாழ்ப்பாணம், இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுதமிழறிஞர், நூலாசிரியர்
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
தனபாக்கியம்
பிள்ளைகள்கமலினி செல்வராஜன்

வாழ்க்கைக் குறிப்பு

மு. கணபதிப்பிள்ளை பருத்தித்துறை புலோலி என்ற கிராமத்தில் தமிழ் வித்துவப் பரம்பரையில் பிறந்தவர். இலங்கை அரச மொழித் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவர்.[1] இலங்கை வானொலியிலும், இலக்கிய மேடைகளிலும் மற்றும் இலக்கிய நூலுருவாக்கத்திலும் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தவர். இவரது மனைவி தனபாக்கியம் ஒரு வயலின் இசைக்கலைஞர். இலங்கை வானொலிக் கலைஞர் கமலினி செல்வராஜன் இவர்களது மூத்த மகள் ஆவார்.

எழுதிய நூல்கள்

  • அன்னைதயை,
  • தமிழன் எங்கே
  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்
  • பயிற்சித் தமிழ் 1
  • மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும்
  • மொழியும் மரபும்
  • வான்மீகியார் தமிழரே!

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.