மறைமலை நகர் தொடருந்து நிலையம்
மறைமலை நகர் காமராஜர் ரயில் நிலையம் (Maraimalai Nagar Kamarajar Railway Station) என்பது சென்னை புறநகா் மின்சார இரயில் சேவையின் ஒரு பகுதியாக, சென்னைக் கடற்கரையிலிருந்து - செங்கல்பட்டு செல்லும் வழி தடத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது சென்னையின் புறநகர்பகுதியான மறைமலைநகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. இது சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து 47 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 55 மீட்டர் உயரத்தில், தேசிய நெடுச்சாலையை (NH 45) ஒட்டி அமைந்துள்ளது.
மறைமலை நகர் காமராஜர் ரயில் நிலையம் | |
---|---|
சென்னை புறநகர் இருப்புவழி மற்றும் தென்னக இரயில்வேயின் நிலையம் | |
![]() | |
இடம் | தமிழ்நாடு, காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகர், தேசிய நெடுஞ்சாலை எண் 45. |
அமைவு | 12°47′49″N 80°1′12″E |
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே |
தடங்கள் | சென்னை புறநகர் இருப்புவழியின் தெற்கு மற்றும் தென்மேற்கு இரயில் பாதை |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைமேல் நிலையம் |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | MMNK |
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே |
வரலாறு | |
மின்சாரமயம் | 9 சனவரி 1965[1] |
முந்தைய பெயர் | தென்னிந்திய இரயில்வே |
அமைவிடம் | |
![]() ![]() மறைமலை நகர் காமராஜர் ரயில் நிலையம் Location within இந்தியா ![]() ![]() மறைமலை நகர் காமராஜர் ரயில் நிலையம் மறைமலை நகர் காமராஜர் ரயில் நிலையம் (தமிழ் நாடு) |
வரலாறு
இந்த இரயில் நிலையமானது 1965 ஆம் ஆண்டு சனவரி 9 ஆம் தேதி தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடம் மின்மயமாக்கப்பட்டபோது இந்த நிலையத்தின் வழித்தடமும் மின்மயமானது.[1]
மேற்கோள்கள்
- "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்த்த நாள் 17 Nov 2012.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.