மரபு வழி
மரபு வழி [1][2] என்பது மரபணுக்களின் வழித்தோன்றல்கள். அரச பரம்பரையைக் குறிக்க இச்சொல்லை வரலாற்று ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். இதனைக் குடி எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[3][4] ஆசிரியரின் வழிவந்த மாணாக்கர் பரம்பரையும் தமிழக வரலாற்றில் உண்டு. இது கருத்து மரபு. இதனைப் பரம்பரை என்றே வழங்குவர்.
புராணம்
பொதுவாக இந்து மத புராணங்களில் ஒரு இனத்தவரை இனங்கான வம்சத்தை அடையாளப்படுத்துவர். பெரும்பாலும் தமிழக அரச மரபுகள் சூரிய வம்சம், சந்திர வம்சம் இவ்விரண்டிலும் மற்ற வம்சங்கள் அடங்கிவிடும். தமிழகத்தில் சேரர், பாண்டியர் சந்திர வம்சம்[5][6] எனவும் சோழர் சூரிய வம்சம்[7][8] பல்லவர் பரத்துவாசர் வம்சம்[9] எனவும் கூறப்படுகின்றனர்.
ஆட்சிமுறை அல்லது தலைமைமுறை வரிசையைக் குறிக்க மரபு, பரம்பரை என்னும் சொற்களைக் கையாளுகின்றனர்.[10]
மாணாக்கர் பரம்பரை
இது வழிவழியாக இவருக்குப் பின்னர் இவர் மகன் என வருவது அன்று. இவருக்குப் பின்னர் இவரது மாணாக்கர் என வருவது.
- கண்ணுடைய வள்ளல் பரம்பரை
- கமலை ஞானப்பிரகாசர் மாணாக்கர் பரம்பரை
- காஞ்சி - ஞானப்பிரகாசர் ஆதீன பரம்பரை
- காவை - அம்பலநாத தம்பிரான் பரம்பரை
- சம்பந்த முனிவர் பரம்பரை
- சிற்றம்பலநாடிகள் பரம்பரை
- சூரியனார் கோயில் ஆதீன பரம்பரை
- தருமபுர ஆதீன பரம்பரை
- திருவாவடுதுறை ஆதீன பரம்பரை
- வைணவ குருபரம்பரை
மேற்கோள்கள்
- ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் - தொல்காப்பியம் புறத்திணையியல்
- தொல்காப்பியம் மரபியல்
- ஒருவீர் தோற்பினும் தோற்பது உங் குடியே (புறநானூறு 45, நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி சண்டையைத் தவிர்க்க, கோவூர் கிழார் பாடியது)
-
ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர்
ஒன்பதின்மர் வீழ, வாயில் புறத்து இறுத்து; (பதிற்றுப்பத்து, ஐந்தாம்பத்து, பதிகம்) - திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச் செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம் பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி - சிலப்பதிகாரம் காடுகாண் காதை
- ஸ்வஸ்திஸரீ சந்திரனது வழித்தோன்றிஇத் தராமண்டல - வீர பாண்டியன் (946-966) சிவகாசிச் செப்பேட்டுப் பகுதி, மேலும் இம்மெய்க்கீர்த்திகளில் மேலும் சில பாண்டியர் சந்திர வம்ச வழிவந்தோர் எனக்கூறப்படுகின்றனர்
- செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும் கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட - மணிமேகலை சிறப்பொப்பாயிரம்
- கலிங்கத்துப்பரணி சோழர் வம்சாவளி
- மயிதவோலுப் பட்டயம்
- சோழர் மரபு, சோழர் பரம்பரை