பூசணி
பூசணி, (
- சொற்பொருள்
பூசணி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்கும் தாவரம் |
வகுப்பு: | மக்னோலியோப்சிடா |
வரிசை: | Cucurbitales |
குடும்பம்: | வெள்ளரிக் குடும்பம் |
பேரினம்: | Cucurbita spp. L. |
இனங்கள் | |
C. maxima |
பூசணிக் கொடியிலும், இலையிலும் பூஞ்சுணைகள் (மென்மையான சுணைகள்) இருக்கும். பூசுணைக்கொடி என்பது பூசணிக்கொடி என மருவிற்று.
- வேறுபாடு
- மஞ்சள் பூசணியைப் பறங்கிக்காய் என்பர். பறை போல் உள்ள காய் என்பது பொருள்.தமிழகத்தின் சில பகுதிகளில் அரசாணிக்காய் எனவும் அழைக்கப்படுகிறது
- வெள்ளைநிறப் பூசணிக்காய்தான் பூசணிக்காய் என்னும் பெயரால் வழங்கப்படும்.
பயன்கள்
- பூசணிக்காய் கறி சமைக்கவும், ரசம் தயாரிப்பிலும் பயன்படுகிறது. பூசணி விதைகளும், சுட்டு உண்ணப்படுவதுண்டு.
- தமிழக இறை வழிபாடுகளில், பூசணியைப் பயன்படுத்துவர். குறிப்பாக அமாவாசை அன்று சமைத்து உண்பர்.
- தமிழகத்தில் சாம்பல் பூசணி வகையை கண் திருட்டியிலிருந்து காக்கும் வண்ணம் இறைவழிபாட்டிற்கு பின், சாலைகளில் போட்டு உடைப்பர். அதனால் பல சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. தமிழக அரசு இங்ஙனம் சாலைகளில் பூசனிக்காய் உடைக்கக் கூடாது என்பதற்கு சட்டம் இயற்றியுள்ளது.
- அமெரிக்கா போன்ற சில நாடுகளில், பூசணிக் கலைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். (எ.கா)ஆலோவின்
மேற்கோள்கள்
- "Cucurbits". Cab International (1997).
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.