புதிய தலைமுறை (இதழ்)

‘புதிய தலைமுறை’ வார இதழ் சென்னையிலிருந்து வெள்ளி கிழமைதோறும் வெளியாகும் முன்னணி தமிழ் வார இதழ் ஆகும். சமூக விழிப்புணர்வு வார இதழாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது. இது அக்டோபர் 2009-ஆம் ஆண்டு முதல் பிரசுரமாகி வருகிறது.

புதிய தலைமுறை
புதிய தலைமுறை
எம்.பி. உதயசூரியன்
வகைசமூக விழிப்புணர்வு
இடைவெளிவெள்ளிக்கிழமை
நுகர்வளவு16,23,000
வெளியீட்டாளர்புதிய தலைமுறை
நிறுவனம்நியூ ஜெனரேஷன் மீடியா கார்ப்பரேஷன்
மொழிதமிழ்
வலைத்தளம்www.puthiyathalaimurai.com

எஸ்.ஆர்.எம் குழுமத்திற்கு உட்பட்ட ‘நியூ ஜெனரேஷன் மீடியா கார்ப்பரேஷன்’ என்ற ஊடக நிறுவனத்தால் இவ்விதழ் வெளியிடப்படுகிறது. இதே ஊடக நிறுவனம் ‘புதிய தலைமுறை கல்வி’ என்ற வார இதழையும், ‘புதிய தலைமுறை பெண்’ என்ற மாத இதழையும் வெளியிட்டு வருகிறது. மேலும் புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியும் புதுயுகம் தொலைக்காட்சியும், இதே ஊடக நிறுவனம் சார்பில் ஒளிபரப்பாகி வருறது.

புதிய தலைமுறை இதழின்  நிறுவன ஆசிரியர் ஆர்.பி. சத்தியநாராயணன் ஆவர். மூத்த பத்திரிகையாளர் எம்.பி. உதயசூரியன் செய்தி ஆசிரியர் ஆவார். இந்த இதழின் விற்பனை பதிப்பு, பதினாறு லட்சத்து இருபத்தி மூன்றாயிரமாக (16,23,000) உள்ளதாக, இந்தியன் ரீடர்ஷிப் சர்வே முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல், சினிமா, சாதனை, தன்னம்பிக்கை, விளையாட்டு தொடர்பான படைப்புகள் இதில் இடம்பெறுகின்றன.     

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    [1]

    மேலும் பார்க்க

    மேற்கோள்கள்

    1. எக்ஸ்சேஞ்ச்4மீடியா, மார்ச் 15,2010

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.