பி. பார்த்தசாரதி
பி. பார்த்தசாரதி ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி சார்பாக சென்னை மாவட்டத்தின் பகுதியான விருகம்பாக்கம் தொகுதியில் 2011 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாட்டின் 14வது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார்.[1]
பி. பார்த்தசாரதி | |
---|---|
தமிழக சட்டமன்ற விருகம்பாக்கம் உறுப்பினர் | |
பதவியில் 2011–2016 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | பெப்ரவரி 18, 1965 சென்னை, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | தேசிய முற்போக்கு திராவிட கழகம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | கற்பகம் |
பிள்ளைகள் | 2 |
விஜயகாந்தின் வீட்டின் அருகில் பத்திரிக்கையாளர் ஒருவரைக் தாக்கிய காரணத்தினால் 17 பேருடன் ஒருவராக 2015 டிசம்பர் 31ஆம் நாள் பி. பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார்.[2]
2016 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதி விருகை வி. என். ரவி என்பவரால் கைப்பற்றப்பட்டது.[3]
உசாத்துணைகள்
- "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
- "Attack on journalists in Chennai: DMDK MLA, 18 others arrested". Zee News. 31 December 2015. http://zeenews.india.com/news/india/attack-on-journalists-in-chennai-dmdk-mla-18-others-arrested_1840341.html. பார்த்த நாள்: 2017-04-27.
- "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.