பலவின்பால்
தமிழ் இலக்கணம் பெயர்ச்சொற்களை உயர்திணை, அஃறிணை எனப் பகுத்துக்கொண்டுள்ளது. எண்ணிக்கையைப் பொருத்து அஃறிணையை ஒன்றன்பால், பலவின்பால் என இரண்டாகக் கொள்கிறது.
- அவை, இவை, உவை, - சுட்டுப்பொயர் [1]
- யாவை - வினாப்பெயர் [2]
- வந்தன, வாரா, வருவ என்பன போல் அ, ஆ, வ என முடியும் வினைச்சொற்கள் பலவின்பாலை உணர்த்தும். [3]
- மான்கள், கற்கள் எனக் 'கள்' சேர்த்து எழுதப்படுவதை நன்னூல் குறிப்பிடுகிறது.
- 'மான் மேய்ந்தன' என எழுதி வினைமுடிவால் பலவின்பாலை உணர்த்துவது மிகப்பழந் தமிழ்நடை.[4] அத்தகைய பெயர்களை பால்பகா அஃறிணைப் பெயர்கள் என்பர்.[5]
மேலும் மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, கோபம், இழிவு ஆகியவற்றைக் காட்டும் பொருட்டு எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே பால் மாறுவதை பால்வழுவமைதி கூறி ஏற்பர்.[6][7]
அடிக்குறிப்பு
- தொல்காப்பியம் பெயரியல் 13
- தொல்காப்பியம் பெயரியல் 13
- தொல்காப்பியம் வினையியல் 19
-
- அகர முதல எழுத்து எல்லாம் - என்று தொடங்கும் திருக்குறளில் 'எழுத்து' என்னும் ஒருமை உணர்த்தும் சொல் 'எழுத்துக்கள் எல்லாம்' என்னும் பன்மைப் பொருளை உணர்த்தி 'முதல' என்னும் பன்மை முடிபு கொண்டுள்ளது. 'பகவன் முதற்று' என்னும் உயர்திணைத் தொடரில் ஒருமை ஒருமை-முடிபு கொண்டுள்ளது.
- வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல (திருக்குறள் 1100) பன்மை
- படிறு இல ஆம செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் (திருக்குறள் 91) - இதில் 'வாய்ச்சொல்' என்பது ஒருமை. 'இல' என்பது பன்மை.
- "பால்பகா அஃறிணைப் பெயர்கள்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் சனவரி 04, 2013.
- "பால்". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் சனவரி 03, 2013.
- "பால்வழுவமைதிக்கான காரணங்கள் யாவை?". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் சனவரி 03, 2013.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.