ப. நீலகண்டன்
ப. நீலகண்டன் (2 அக்டோபர் 1916 - 3 செப்டம்பர் 1992) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். திரைப்படங்களுக்கு கதை, வசனங்களும் எழுதினார். இவர் 2 அக்டோபர் 1916 அன்று தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் பிறந்தார். 1947இல் இவருடைய நாம் இருவர் நாடகத்தினை அவிச்சி மெய்யப்பச் செட்டியார் திரைப்படமாக எடுத்தார். 1948இல் வேதாள உலகம் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். 1951இல் ஓர் இரவு திரைப்படத்தில் துணை இயக்குனராகப் பணியாற்றினார். இத்திரைப்படத்திற்கு வசனத்தினை கா. ந. அண்ணாதுரை எழுதினார்.
ப. நீலகண்டன் | |
---|---|
![]() | |
பிறப்பு | அக்டோபர் 2, 1916 |
இறப்பு | செப்டம்பர் 3, 1992 75) | (அகவை
செயல்பட்ட ஆண்டுகள் | 1945-1980 |
ஏஎல்எஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் அம்பிகாபதி (1957) மற்றும் திருடாதே (1961) ஆகிய இரு திரைப்படங்களை தயாரித்தார். மேலும் தமிழ், கன்னடத் திரைப்படங்கள் பலவற்றை இயக்கினார். அவற்றில் 1957 இல் சக்கரவர்த்தி திருமகள் தொடங்கி 1976இல் நீதிக்கு தலைவணங்கு முதல் எம்.ஜி.ஆரை வைத்து 17 திரைப்படங்களை இயக்கினார். இதனால் எம்.ஜி.ஆரின் ஆசுதான இயக்குனர் என்று புகழப்பட்டார்.
திரைப்படங்கள்
உசாத்துணை
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் P. Neelakantan
- பி நீலகண்டனின் வாழ்க்கை வரலாறு
- நீலகண்டன் சிறுகதைகள்- சிறுகதைகள் தளம்