நொபொரு காராசிமா

நொபொரு காரசிமா (Noboru Karashima, 辛島昇, 24 ஏப்ரல் 1933 - 26 நவம்பர் 2015)[1][2] சப்பானிய வரலாற்றாசிரியரும், எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். இவர் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின்(IATR) முன்னாள் தலைவர் (1989-2010) ஆவார்.[3][4]

நொபொரு காராசிமா
Noboru Karashima
பிறப்புஏப்ரல் 24, 1933(1933-04-24)
சப்பான்
இறப்புநவம்பர் 26, 2015(2015-11-26) (அகவை 82)
பணிபேராசிரியர், எழுத்தாளர், வரலாற்றாளர்
விருதுகள்ஃபுக்குவோக்கா ஆசியப் பண்பாட்டுப் பரிசு
பத்மசிறீ

நொபொரு கராஷிமா 1995 ல் தஞ்சாவூரில் நடைபெற்ற 8 வது உலகத்தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தியவர். இவர் 2010ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற 9வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை புறக்கணித்தார்; தமிழ் மாநாடுகளில் அரசியல் தலையீடுகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் புறக்கணிப்பதாக கூறினார்.[4] 2013ஆம் ஆண்டு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[5][6]

மறைவு

உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் தலைவராக 1989-ஆம் ஆண்டு முதல் 2010 வரை பணியாற்றிய நொபுரு கரஷிமா தனது 82-ஆவது வயதில் ஜப்பானில், 26 நவம்பர் 2015 அன்று (வியாழக்கிழமை) மறைந்தார்[7]

எழுதிய நூல்கள்

  • Ancient Medieval South Indian Society in Transition (Oxford Collected Essays)-2010
  • A Concise History of South India: Issues and Interpretations (2014)
  • A Concordance of Nayakas: The Vijayanagar Inscriptions in South India (2002)
  • Towards a New Formation: South Indian Society under Vijayanagar Rule (1993)

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.