நீர் வேளாண்மை
நீர் வேளாண்மை எனப்படுவது, கடல் உணவுகளான மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி போன்ற கடல்வாழ் விலங்குகள் மற்றும் கடல்களை போன்ற பாசிகளான நீர்வாழ் தாவரங்களை உள்ளடக்கிய நீர் வாழ் உயிரினங்களை வேளாண்மை செய்தலைக் குறிக்கும்[1][2]. இது நன்னீரிலோ, உப்பு நீரிலோ கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் செய்யப்படும் நீர்வாழ் உயிரினங்களின் வளர்ப்பையே குறிப்பதாகும். மாறாக கடலில் சென்று மீன் பிடித்தலை மேற்கொள்ளும் வணிக ரீதியான மீன் பிடித்தொழில் இந்த நீர் வேளாண்மைக்குள் அடங்குவதில்லை[3]. இயற்கையான கடல் சூழலிலேயே தடைகளை இட்டு இந்த நீர்வேளாண்மை மேற்கொள்ளப்படுமாயின் அது, கடல் நீர் வேளாண்மை எனப்படும்.
அலங்காரத்திற்கென வளர்க்கப்படும் மீன்களை வேளாண்மை செய்தலும் நீர் வேளாண்மை என்று அழைக்கப்படுவதுண்டு.
ஒப்பிட்டறிக
அடிக்குறிப்புகள்
- Environmental Impact of Aquaculture
- Aquaculture’s growth continuing: improved management techniques can reduce environmental effects of the practice.(UPDATE).” Resource: Engineering & Technology for a Sustainable World 16.5 (2009): 20-22. Gale Expanded Academic ASAP. Web. 1 October 2009. <http://find.galegroup.com/gtx/start.do?prodId=EAIM.>.
- American Heritage Definition of Aquaculture
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.