நான் கடவுள் (திரைப்படம்)

நான் கடவுள், 2009ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். பாலா இயக்கத்தில் ஆர்யா, பூஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்களை எழுதியுள்ளார். அவரது ஏழாவது உலகம் எனும் புதினத்தைத் தழுவி திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிய, சூப்பர் சுப்பராயன் சண்டையமைத்துள்ளார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

நான் கடவுள்
நான் கடவுள் திரைப்பட விளம்பரம்
இயக்கம்பாலா
தயாரிப்புசிவஸ்ரீ ஸ்ரீனிவாசன்
கதைபாலா
இசைஇளையராஜா
நடிப்புஆர்யா
பூஜா
ஒளிப்பதிவுஆர்தர் வில்சன்
வெளியீடு2009
மொழிதமிழ்
மொத்த வருவாய்21 கோடி

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஈன்ற மகவால் குலத்துக்கு இழப்பு என சோதிடர்கள் கூறியதை நம்பி மகன் ருத்ரனை சிறுவயதிலேயே காசியில் கொண்டுவந்து விடுகிறார் அப்பா நமச்சிவாயம். பதினான்கு ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பின் குற்றவுணர்வு துரத்த மகனைத் தேடி காசிக்கு வருகிறார். பாவம் கரைக்கவரும் மக்கள் ஆற்றில் எ‌ரியும் சிதைக்கு நடுவே தவக்கோலத்தில் மகனைக் கண்டுபிடிக்கிறார். ருத்ரன் இப்போது சுற்றம் துறந்த அகோரித் துறவியாக உள்ளான். "அகோரிக்கு உறவு கிடையாது, அதை அறுத்துவிட்டு வந்து சேர்" என அறிவுரை சொல்லி ஊருக்கு அனுப்பி வைக்கிறார் ருத்ரனின் ஆசிரியர். ஊருக்கு வந்த பிறகும் வீட்டோடு ஒட்டாமல் இருக்கிறான். இது அவனது உறவுகளுக்கு மன வருத்தம் தந்தாலும், அவன் மீண்டும் தங்களுடன் சேர்ந்து வாழ மாட்டான் என்பதை உணர்ந்து அவனை விட்டு விடுகிறார்கள்.

உடல் ஊனமுற்றவர்களையும் மூளை வளர்ச்சி குறைந்தவர்களையும், உறவற்றவர்ளையும் பிச்சைக்காரர்களாக்கி தொழில் செய்து வருகிறான் தாண்டவன். அவனிடம் சிக்கிக் கொள்கிறாள் பாட்டுப் பாடி பிழைப்பு நடத்தும் கண் தெ‌ரியாத அம்சவல்லி. தாண்டவன், முக அழகு குறைந்த ஒருவனுக்குஅவளை விற்க முயல்கிறான். உடனிருப்பவர்கள் அவளைக் காப்பாற்றுகிறார்கள். பாதுகாப்பு தேடி அவள் வந்து சேரும் இடம் ருத்ரன் இருக்கும் மலைக்கோயில். அவளை விற்க முயன்ற இடைத்தரகரைக் கொன்று பாதுகாப்பு அளிக்கிறான். கொலை வழக்கில் கைதாகி நீதிமன்றம் சென்றாலும், அவன் தான் குற்றவாளி என்று நிறுவ வழி இல்லாததாலும், ருத்ரனை தாண்டவனிடம் இடமே மாட்டி விட காவலர்கள் நினைப்பதாலும், வழக்கிலிருந்து விடுபடுகிறான். இதற்கிடையே, தாண்டவன் அம்சவல்லி மேல் கோபம் கொண்டு கொடூரமாகத் தாக்க, அவள் அடைக்கலம் தேடி ருத்ரனிடம் செல்கிறாள். தாண்டவனும் அங்கு வர, இறுதிக் காட்சியில், தாண்டவனைக் கொல்கிறான். மிகவும் மனமொடிந்த அம்சவல்லி, இந்தப் பிறப்பில் இருந்து விடுபடக் கோரி ருத்ரனிடம் மன்றாட, அவளைக் கருணைக் கொலை செய்கிறான். பிறகு, அவனது ஆசிரியர் குறிப்பிட்டபடி, மீண்டும் காசிக்குச் செல்கிறான்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.