நந்தவன தேரு
நந்தவன தேரு (Nandhavana Theru) 1995இல் வெளிவந்த 1995 தமிழ்த் திரைப்படமாகும். இதனை இயக்கியவர் ஆர். வி. உதயகுமார். இப்படத்தில் கார்த்திக் மற்றும் அறிமுக நாயகி ஸ்ரீநிதி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர். டி. சிவா மற்றும் ஏ. செல்வராஜ் ஆகியோர் இதனைத் தயாரித்திருந்தனர். இசை இளையராஜா 1995 மே 11 அன்று இப்படம் வெளி வந்தது. இப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை [1][2][3][4]
நந்தவன தேரு | |
---|---|
இயக்கம் | ஆர். வி. உதயகுமார் |
தயாரிப்பு | டி. சிவா ஏ. செல்வராஜ் |
கதை | கோகுல கிருஷ்ணன் (வசனம்) |
திரைக்கதை | ஆர். வி. உதயகுமார் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஆர். கணேஷ் |
படத்தொகுப்பு | பி. எஸ். நாகராஜ் |
கலையகம் | டி. சிவா, அம்மா கிரியேசன்ஸ் |
வெளியீடு | மே 11, 1995 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
சீனு (கார்த்திக்) அவன் ஒரு அனாதை மற்றும் ஒரு முழுநேர திருடன் . சிறைக்கு வெளியே தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவன் சிறைக் கைதிகளுக்கு உதவுகிறான். ஒரு நாள், கைதி ஒருவன் சோகமாக இருக்கிறான். சீனு அவனது பிரச்சனையைப் பற்றி அவனிடம் கேட்கிறான். காயத்ரி (ஸ்ரீநிதி) என்ற ஒரு பாடகியின் தாய்வழி மாமா ஆதிசேஷன் (தேவன்) அவர் பெரிய செல்வந்தர், காயத்ரியின் மாமா ராஜசேகரன் (ஆனந்த் ராஜ்) மற்றும் அவரது மகன் குணசேகரன் ஆகியோரால் ஆதிசேஷன் தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படுகிறார். ஆதிசேஷனுக்கு எதிராக காயத்ரியின் மனதில் விஷத்தை தூவுகிறார்கள்.
காயத்ரி வாழ்க்கை பெரும் அபாயகரமானதாக இருப்பதாக ஆதிசேஷன் நம்புகிறார், இதற்காக, சீனுவை காயத்திரியை காப்பாற்றக் கோருகிறார். சீனு அவரது பிரச்சனையை தீர்த்து வைப்பதாக வாக்களிக்கிறான். ஆரம்பத்தில், காயத்ரி சீனுவைத் தவிர்க்கிறார், ஆனால் விரைவில் ராஜசேகரின் உண்மையான முகத்தை அவள் புரிந்துகொள்கிறாள், அவள் சீனுவின் நண்பராகிறாள். பின்னர் காயத்திரியின் வாழ்க்கையில் என்னவாயிற்று?. ஆதிசேஷன் சிறையிலிருந்து மீண்டாரா? ராஜசேகரன் மற்றும் அவரது மகன் குணசேகரன் ஆகிய இருவரும் தண்டிக்கப்படனரா? என்பது படத்தின் மீதிக்கதைச் சொல்கிறது.
நடிகர்கள்
- கார்த்திக் - சீனு என்கிற சீனிவாசன்
- ஸ்ரீநிதி - காயத்திரி
- ஆனந்த் ராஜ் (நடிகர்) - ராஜசேகர்
- தேவன் - ஆதிசேஷன்
- சனகராஜ் - ஆல்பர்ட்
- விவேக் - பீடி
- வடிவேலு (நடிகர்) - தீக்குச்சி
- மனோரமா - சீனுவின் பக்கத்து வீட்டுக்காரர்
- காயத்திரி - சீனுவின் பக்கத்து வீட்டுக்காரர்
- சிவா - -சுரேஷ்
- மதன் பாப்
ஒலித்தொகுப்பு
Nandhavana Theru | |
---|---|
soundtrack by | |
வெளியீடு | 1995 |
ஒலிப்பதிவு | 1995 |
இசைப் பாணி | Feature film soundtrack |
நீளம் | 32:31 |
இசைத் தயாரிப்பாளர் | இளையராஜா |
இசையமைப்பாளர் இளையராஜா இசைமைத்திருந்தார். 8 பாடல்கள் கொண்ட படத்தின் பாடல்கள் 1995இல் வெளி வந்தது, ஆர். வி. உதயகுமார் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.[5]
எண் | பாடல் | பாடியோர் | நேரம் |
---|---|---|---|
1 | "அடிச்சு புடிச்சி" | அருண்மொழி, மனோ, எஸ்என். சுரேந்தர் | 4:51 |
2 | "அண்ணிய காட்டு அண்ணனே" | மனோ, சுவர்ணலதா (பின்னணிப் பாடகி) | 4:53 |
3 | "என்ன வரம் வேண்டும்" | மனோ, லேகா, சிந்துதேவி | 5:29 |
4 | "எந்தன் வாழ்க்கையின்" | Mano | 5:19 |
5 | "ரமணா ஸ்ரீ" | Shobhana | 2:10 |
6 | " உன் முன்னே நான் பாட " | அருண்மொழி | 1:05 |
7 | "வெள்ளி நிலவே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், உமா ரமணன் | 5:10 |
8 | "விரலில் ஸ்ருதி மீட்டவா" | சித்ரா | 3:34 |
குறிப்புகள்
- "Find Tamil Movie Nandavana Theru". jointscene.com. மூல முகவரியிலிருந்து 3 March 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-01-03.
- "Nandhavana Theru". popcorn.oneindia.in. மூல முகவரியிலிருந்து 14 July 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-01-03.
- "filmography of nandhavana theru". cinesouth.com. பார்த்த நாள் 2012-01-03.
- "Tamil Movie News--1995 Review". groups.google.com (1996-01-09). பார்த்த நாள் 2012-08-31.
- "Nanthavana Theru — Illayaraja". thiraipaadal.com. பார்த்த நாள் 2012-01-03.