தேனி. பொன். கணேஷ்
தேனி. பொன். கணேஷ் என்பவர் ஒரு எழுத்தாளர். தேனியில் உணவகம் ஒன்றைச் சொந்தமாக நடத்தி வரும் இவர் தமிழில் வெளியாகும் பல அச்சிதழ்களில் துணுக்குகள் (குறுந்தகவல்கள்), கட்டுரைகள் போன்றவற்றை எழுதியிருக்கிறார். ஆன்மிகம் குறித்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வமுடையவர்.
தேனி. பொன். கணேஷ் | |
---|---|
பிறப்பு | பொன். கணேஷ் சூலை 11, 1964 இராமநாதபுரம், தமிழ்நாடு, ![]() |
இருப்பிடம் | தேனி |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | தேனி. பொன். கணேஷ், சீனு, சமுதாயப் பித்தன் |
கல்வி | பத்தாம் வகுப்பு |
அறியப்படுவது | எழுத்தாளர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | பொன்னுச்சாமி சேர்வை (தந்தை), சேதுஅம்மாள் (தாய்) |
வாழ்க்கைத் துணை | வளர்மதி |
பிள்ளைகள் | கோபிநாத் (மகன்), ரம்யா (மகள்) |
உறவினர்கள் | சகோதரர்கள் - 4, சகோதரிகள் - 2 |
எழுதியுள்ள நூல்கள்
- சின்னச் சின்ன ஆன்மிகக் கதைகள் (விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் வெளியீடு - 2006)
- ஆச்சர்யம்!ஆனால் உண்மை (விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் வெளியீடு - 2006)
- மேதைகள் சொன்ன போதனை கதைகள் (விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் வெளியீடு - 2008)
- அனுமன் (தென்றல் நிலையம், சென்னை வெளியீடு - 2010)
- பொது அறிவுத் துளிகள் (கௌதம் பதிப்பகம், சென்னை வெளியீடு - 2012)
மொழி மாற்றம்
இவரது சின்னச் சின்ன ஆன்மிகக் கதைகள் எனும் நூல் கேரளாவின் மாத்ருபூமி நிறுவனத்தால் மலையாள மொழியில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.