தனியன் பாடிய புலவர்கள்
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலிலுள்ள ஆழ்வார்களைச் சிறப்பித்து அவர்களது பாடல்களுக்கு எழுதப்பட்ட சிறப்புப் பாயிரம் போலத் 'தனியன்' பாடல்கள் பலரால் எழுதப்பட்டுள்ளன. அவை வெண்பா அல்லது கட்டளைக் கலித்துறை யாப்பால் அமைந்தவை. அவை அந்தந்த ஆழ்வாரின் பாடல்கள் தொடங்கும் இடத்தில் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட தனியன் பாடல்களைப் பாடிய புலவர்கள்:
10-ஆம் நூற்றாண்டு
- நாதமுனிகள்
- உய்யக்கொண்டார்
- மணக்கால் நம்பி
- குருகை காவலப்பன்
- சகவர முனி
- திருக்கண்ணமங்கையாண்டான்
- ஆளவந்தார்
- வங்கிபுரத்தாய்ச்சி இவர் தனியன் பாடவில்லை. ஆழ்வார்களின் பெயர்களைத் தொகுத்துப் பாடியுள்ளார்.
12-ஆம் நூற்றாண்டு
- கூரத்தாழ்வார் (1031-1136)
- முதலியாண்டான் (1019-1124
- எம்பார் (1026-1131)
- சீராமப்பிள்ளை (1123)
- கிடாம்பியாச்சான் (1058-1158)
- அனந்தாழ்வார் (1055-1205)
- பிள்ளை நரையூர் அரையர்
- சோமாசியாண்டான்
- வேதப்பிரான் பட்டர்
- பிள்ளை உறங்காவில்லிதாசர்
கருவிநூல்
- மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
- மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.