தந்தேவாடா

தந்தேவாடா அல்லது தண்டேவாடா (Dantewada) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்த தந்தேவாடா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். [1] விசாகப்பட்டினத்திலிருந்து அகலப் பாதையில் தந்தேவாடா நகரம் இணைக்கப்பட்டுள்ளது.

தந்தேவாடா
दंतेवाडा
நகரம்
தந்தேவாடா
தந்தேவாடா
ஆள்கூறுகள்: 18.9000°N 81.3500°E / 18.9000; 81.3500
நாடு இந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
மாவட்டம்தந்தேவாடா
ஏற்றம்351
மக்கள்தொகை (2011)
  மொத்தம்13
மொழிகள்
  அலுவல் மொழிகள்இந்தி, ஹலாபி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுCG-18

புவியியல்

தந்தேவாடா நகரம் சங்கனி ஆறு மற்றும் தங்கினி ஆற்றின் கரையில், கடல் மட்டத்திலிருந்து 351 மீட்டர் (1154 அடி) உயரத்தில் 18.9000°N 81.3500°E / 18.9000; 81.3500 பாகையில் அமைந்துள்ளது.[2]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 15 வார்டுகளும், 3,157 வீடுகளும் கொண்ட தந்தேவாடா பேரூராட்சியின் மக்கள்தொகை 13,633 ஆகும். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1609 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆயிரம் ஆண்களுக்கு 977 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 82.63 % ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 94.32%, இசுலாமியர்கள் 2.37%, கிறித்தவரகள் 2.64% மற்றவர்கள் 0.67% ஆகவுள்ளனர். [3]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.