தசாங்கப்பத்து
தசாங்கப்பத்து என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். தசாங்கம் என்பது, தசம், அங்கம் என்னும் இரண்டு வடமொழிச் சேர்க்கையால் உருவானது. தசம் என்பது பத்து என்னும் பொருள் கொண்டது அங்கம் என்பது உறுப்பு. எனவே தசாங்கம் என்பது பத்து உறுப்புக்கள் எனப் பொருள்படும். மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானைப்படை, குதிரைப்படை, கொடி, முரசு, செங்கோல் எனும் பத்தும் அரசுக்கு உரிய உறுப்புக்களாகும். இப் பத்து உறுப்புக்களையும் பத்து நேரிசை வெண்பாக்களால் பாடுவதே தசாங்கப்பத்து ஆகும்[1].
பிரபந்தத் திரட்டு என்னும் இலக்கணநூல் இதனைத் தசாங்க வன்னிப்பு எனக் குறிப்பிடுகிறது. வன்னிப்பு என்பது வருணனை.
குறிப்புகள்
- நவநீதப் பாட்டியல், பாடல் 40
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இவற்றையும் பார்க்கவும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.