பாட்டியல்

பாட்டியல் என்பது, பிரபந்த இலக்கியங்கள் எனப்படும் சிற்றிலக்கியங்கள் தொடர்பான இலக்கணத்தைக் குறிக்கும். பிரபந்தங்களின் வகை, அவற்றின் இலக்கணங்கள், அவற்றைப் பாடவேண்டிய முறை, வெவ்வேறு வருணத்தாருக்குரிய பாடல்கள், அவ்வருணத்தார் இயல்புகள், பாட்டுடைத்தலைவர் நூல் கேட்கவேண்டிய முறை, நூல் அரங்கேற்றம் செய்வதற்குரிய அவையின் இயல்பு, புலவர்களின் வகை போன்றவை பாட்டியலுள் அடங்குகின்றன. இதனால், செய்யுள்களின் உறுப்புக்களையும் அவற்றின் இனங்களையும் விளக்கும் யாப்பியலினின்றும் வேறுபடுகின்றது.

பாட்டியல் என்னும் நூல் வகையானது பொதுவாக மூன்று வகையான செய்திகளைக் கூறும்.

புலம் எனத் தொல்காப்பியப் பாயிரம் கூறும் இலக்கம் மொழியை அறிவியல் பார்வையில் அணுகும். முன்னோர் பாடல்களில் அமைந்துகிடக்கும் மரபுநெறியைப் புலப்படுத்தும். தொல்காப்பியம், நன்னூல், இறையனார் களவியல், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பி அகப்பொருள் முதலானவை புலனெறி இலக்கணங்கள்.

பாட்டியல் இலக்கண நூல்கள் எழுத்து, சொல், நூல் எனப் பகுத்துக்கொண்டு வேறு வகையில் அணுகும்.

ஐங்குறு நூறு என்னும் நூல் ஐந்து அகத்திணை மேல் ஐந்து புவலர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. பதிற்றுப்பத்து 10 அரசர்களைப் 10 புலவர்கள் 10, 10 பாடல்களாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இவை இலக்கியப் பாடல்களின் தொகுப்பு.

பாட்டியல் நூல்கள்

பிரபந்த இலக்கியங்கள் தோன்றியபின்னரே அவற்றுக்கு இலக்கணம் வகுக்கப் பாட்டியல் நூல்கள் தோன்றின. தமிழில் பல பாட்டியல் நூல்கள் எழுதப்பட்டதாக அறியப்பட்டுள்ளன. அவற்றுள்,

  • இந்திரகாளியம் ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.10ம் நூற்றாண்டு
  • இலக்கணவிளக்கப் பாட்டியல் வைத்தியநாததேசிகர் -கி.பி.17ம் நூற்றாண்டு
  • சிதம்பரப் பாட்டியல் பரஞ்சோதிமுனிவர் -கி.பி.16ம் நூற்றாண்டு
  • தாத்தாத்திரேயர் பாட்டியல்
  • நவநீதப் பாட்டியல் நவநீதநடனார் -கி.பி.14ம் நூற்றாண்டு
  • பண்டாரப் பாட்டியல்
  • பன்னிரு பாட்டியல் ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.13ம் நூற்றாண்டு
  • பிரபந்த தீபம் ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.19ம் நூற்றாண்டு
  • பிரபந்த தீபிகை முத்துவேங்கட சுப்பையர் -கி.பி.19ம் நூற்றாண்டு
  • பிரபந்த மரபியல் ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.16ம் நூற்றாண்டு
  • பிரபந்தத் திரட்டு ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.19ம் நூற்றாண்டு
  • முத்துவீரியப் பாட்டியல்
  • வரையறுத்தபாட்டியல் ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.14ம் நூற்றாண்டு
  • வெண்பாப் பாட்டியல்/வச்சணந்திமாலை குணவீர பண்டிதர் -கி.பி.13ம் நூற்றாண்டு

என்பனவும் அடங்கும். இவற்றுள், முதலாவது நூல் இன்று இல்லை. பண்டாரப் பாட்டியலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஏனைய இன்று கிடைக்கக்கூடியதாக உள்ளன.

பாட்டியல் நூல்களின் கால வரிசை

எண்நூல்யாப்புநூற்றாண்டு
1பன்னிரு பாட்டியல்நூற்பா11
2வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியல்வெண்பா12
3நவநீதப் பாட்டியல்கட்டளைக் கலித்துறை14
4வரையறுத்த பாட்டியல் (ஒருபகுதி மட்டும்)கட்டளைக் கலித்துறை14
5சிதம்பரப் பாட்டியல்விருத்தம்16
6இலக்கணவிளக்கப் பாட்டியல்நூற்பா (பிற்காலம்)18

இவற்றையும் காண்க

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.