டைப்பிஸ்ட் கோபு

கோபாலரத்தினம் எனும் இயற்பெயரைக் கொண்ட டைப்பிஸ்ட் கோபு (இறப்பு: மார்ச் 6, 2019) 600 இற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 400 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தவர்.[1][4][5]

கோபாலரத்தினம்
பிறப்பு1933/1934[1]
இறப்பு (அகவை 85)[2][3]
செயல்பட்ட 
ஆண்டுகள்
1955–2019
அறியப்படுவதுதிரைப்பட, நாடக நடிகர்

நடிப்புத் தொழில்

திருச்சி மாவட்டம், மணக்கால் கிராமத்தில் பிறந்த கோபாலரத்தினம்[1], சென்னை இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்துக் கொண்டிருந்த போது, 1955-இல் சோ மற்றும் ஒய். ஜி. மகேந்திரன் நாடக குழுக்களில் தொடர்ந்து நடித்துள்ள கோபு தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான நாகேசுக்கு திரைப்பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர்.

1959-ல் நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில் டைப்பிஸ்ட் கோபு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபாலரத்தினத்திற்கு டைப்பிஸ்ட் கோபு அடைபெயர் நிலைத்து நின்றது.[1]1965ல் கே. பாலசந்தர் இயக்கிய நாணல் எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.

பின்னர் ஒய். ஜி. மகேந்திரன் நாடகக் குழுவில் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்தார். 2002ல் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. [6]இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். [7]

நடித்த சில திரைப்படங்கள்

தொலைக்காட்சித் தொடர்கள்

  • வசூல் சக்கரவர்த்தி
  • வீட்டுக்கு வீடு லூட்டி
  • மிஸ்டர். பிரைன்
  • துப்பறியும் சாம்பு[8]

மறைவு

டைப்பிஸ்ட் கோபு, தமது 82-வயதில் உடல்நலக்குறைவால் 6 மார்ச் 2019 அன்று மறைந்தார். [9]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.