தீஸ்தா செதல்வாட்
தீஸ்தா செதல்வாட் (Teesta Setalvad ;1962)[1] மனித உரிமைகளுக்குப் போராடும் ஓர் இந்தியப் பெண்மணி ஆவார். மத வாதத்துக்கு எதிராகப் போராடும் இதழியலாளர். பெண்களுக்காகவும் தலித் இன மக்களுக்காகவும் இசுலாமிய இன மக்களுக்காகவும் பாடுபட்டு வருபவர். இவர் ஒரு இந்திய ஊடகவியலாளர் மற்றும் கல்விமான் ஆக அடையாளம் காணப்படுகின்றார்.[2][3][4]
தீஸ்தா செதல்வாட் | |
---|---|
![]() தீஸ்தா செதல்வாட் 2015 | |
பிறப்பு | 9 பெப்ரவரி 1962 மும்பை, மகாராட்டிரம் |
தேசியம் | இந்தியர் |
பணி | குடிசார் உரிமைகள் செயல்பாட்டாளரும், ஊடகவியலாளரும் |
தனிப்பட்ட வாழ்க்கை
டீஸ்டா ஒரு குஜராத்தி இனத்தவர், மும்பையைச் சேர்ந்த சட்டத்தரணியான அதுல் செடல்வாட் மற்றும் கிராமப்புற கைப்பணி விளக்கவுரையாளர் சீதா செடல்வாட் ஆகியோரின் மகளாவார்[5]. இவருடைய பாட்டனார் எம்.சி செதல்வாட் இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரல்[2][4] இவருடைய கணவர் ஜேவித் ஆனந்த் ஒரு இதழாளர்; மனித உரிமை செயல்பாட்டாளரும் ஆவார்.[6]. அவருக்கும் அவரது கணவர் ஜேவித்துக்கும் தாமர மற்றும் ஜிப்ரான் என்னும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[7]
அவர் 1983 இல் பம்பாய் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பாடத்தில் பட்டம்பெற்று, ஊடகவியலாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.[8] அவர் தி டெய்லி மற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள்களின் மும்பைப் பதிப்புகளிற்கும் பின்னர், பிசினஸ் இந்தியா பத்திரிக்கைக்காகவும் செய்திகள் சேகரித்தார். பம்பாய் கலவரங்கள் நடந்தபோது இனவாத வன்முறைகளால் அதிர்ச்சிக்குள்ளான அவர், கொள்கைவாதியான தனது கணவர் ஜேவித் ஆனந்துடன் சேர்ந்து 1993 இல் முழு நேர ஊடகத்துறையை விட்டுவிலகி, மாதாந்திர இதழான கம்யூனலிஸம் கம்பட் டைத் தொடங்கினார்.[9]
2007 இல், "மஹாராஷ்டிராவில் பொதுப் பணிகள்" செய்ததற்காக இந்திய அரசாங்கம் அவருக்கு பத்ம ஸ்ரீ விருதுவழங்கியது.[10]
சமூகப் பணி
2002 ஆம் ஆண்டில் குசராத்தில் நிகழ்ந்த இனக் கலவரத்தில் மாண்டோருக்காகவும் பாதிக்கப்பட்டோருக்காகவும் நியாயமும் நீதியும் கோரி ஓர் அமைப்பை உருவாக்கினார். நீதிக்கும் அமைதிக்குமான குடிமக்கள் என்பது அதன் பெயர்.[11] குசராத்து மதக் கலவரம் குறித்து நடந்த பன்னாட்டு மத உரிமைகளுக்கான அமெரிக்கக் கமிசன் உசாவலில் சாட்சியம் அளித்தார்.[12][13][14][15][16] இந்தியப் பள்ளிக்கூடங்களில் வரலாறு சமூக பாடத் திட்டங்களில் மாற்றம் வேண்டும் என்பதற்காகவும் அவற்றைத் திருத்தி அமைக்க வேண்டும் என்றும் கோஜ் (KHOJ) என்னும் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மக்கள் உரிமைகள் அமைப்பின் (PUHR) பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
அரசியல் பார்வைகள் மற்றும் இணைப்புகள்
- டீஸ்டா "இடதுசாரி ஆதரவாளர்' என விவரிக்கப்பட்டுள்ளார்,[17] மேலும் அவரும் அவரது கணவர் ஜேவ்ட் ஆனந்தும் "இடதுசாரி மரபின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் பெருமை கொள்வதாக" தங்களைத் தாமே விவரித்துள்ளனர். இருப்பினும், மேற்கு வங்காளத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்கிஸ்ட்) அரசாங்கத்தை குற்றங்கூறி விமர்சித்துள்ளார், நந்திகிராம் கிராமத்தில் மார்ச் 14 2007 அன்று பொதுமக்கள் கொல்லப்பட்ட இந்த துன்பியல் சம்பவத்தை, "எதிர்பார்க்கப்படாத, நியாயப்படுத்தமுடியாத மற்றும் துரதிர்ஷ்டமான" நிகழ்வு என்று அழைத்தார்.[3]
- 1999 லோக் சபா தேர்தல்களின் முன்பு, பாரதிய ஜனதா கட்சி உள்ளடங்கலாக சங் பரிவாரைத் தாக்குகின்ற விளம்பரங்களை தேசிய நாளிதழ்களில் இடுவதற்காக இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்கிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பத்து தனிநபர்களிடம் டீஸ்டா மற்றும் ஜேவ்டின் வெளியீடான கம்யூனலிஸம் கம்பட் கோரிக்கைவிடுத்து நிதிகளைப் பெற்றது.[18] இந்த விளம்பரங்களில் ஒன்று 13 பெண்கள் அரசு சாரா நிறுவனங்களால் ஆதரிக்கப்பட்டது[18]; இந்த பிரச்சாரத்துக்கான மொத்த கணக்கறிக்கை 15 மில்லியன் ரூபாய்களாகும். இருப்பினும், அவர்கள் வேறுஇடத்தில், 1984 சீக்கியருக்கு எதிரான கலவரங்கள் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா ஆணைய அறிக்கை ஆகிய பிரச்சனைகளுக்காக காங்கிரஸ் கட்சியைக் குறைகூறினர்.[19]
- பெஸ்ட் பேக்கரி வழக்கில் டீஸ்டா செய்த பணிக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்கிஸ்ட்) அவரைப் பாராட்டியுள்ளது.[20]
செயல்முறைவாதம்
- டீஸ்டாவின் பத்திரிகை கம்யூனலிஸம் கம்பட் இனம்சார்ந்த அமைதியை ஊக்குவிக்கவும், இனவாத வன்முறைகளை முன்னெடுப்பவர்களைத் தாக்கவும் கோருகிறது.
- ஜூன் 10, 2002 அன்று, கோத்ரா இனவாத வன்முறையின் பின்னரான செயல்களில் பாரதிய ஜனதா கட்சி (BJP) குஜராத் அரசாங்கத்துக்கு எதிராக டீஸ்டா சர்வதேச சமய சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணையத்தில் சாட்சி கூறினார்.[21]
- 1997 இல், டீஸ்டா கோஜ் (குவெஸ்ட்) என்ற திட்டத்தில் பணிபுரியத் தொடங்கினார், இது "சிறுபான்மைக்கு எதிரான பாரபட்சங்களை" நீக்குவதற்காக இந்திய பாடசாலை வரலாறு மற்றும் சமூகக் கல்வி பாடநூல்களைத் திருப்பியெழுதுவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.[22]
- இவர் ஒரு தீவிரமான பெண்ணியவாதி, தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள், சலுகைகளுக்காக பிரச்சாரம் செய்கிறார்.[8]
பெஸ்ட் பெஸ்ட் பேக்கரி வழக்கு/குஜராத் கலவரங்கள் விளைவு
நவம்பர் 2004 இல், இதுவரை எப்போதும் இல்லாதவாறு குஜராத்துக்கு வெளியே வழக்கை இடமாற்றுவதற்கு வழிவகுக்குமாறு, குறிப்பிட்ட சில கூற்றுக்கைளைக் கூறுமாறு பெஸ்ட் பேக்கரி வழக்கில் மிக முக்கியமான சாட்சியான சகீரா ஷீக்குக்கு இவர் அழுத்தம் கொடுத்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டார். ஆகஸ்ட் 2005 இல், இவருக்கு எதிராக சகீரா கொடுத்த தூண்டுதல் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய உச்ச நீதிமன்ற சபை மன்னிப்புக் கொடுத்தது.
சப்ராங் தகவல்தொடர்பு உறுப்பினர்கள் அமெரிக்கா வந்து, கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் சமய சுதந்திரம் வழங்கப்படுவதில்லை என்றும், BJP ஆட்சிக்கு கீழுள்ள இந்திய மாநிலத்தில் சிறுபான்மையினரின் (கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள்) சமய சுதந்திரங்கள் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.[20]
பொய்யான வழக்குகள் குறித்த சர்ச்சை
குஜராத் வழக்கை புலன் விசாரணை செய்து துரிதப்படுத்துவதற்காக இந்திய உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), குஜராத் கலவர வழக்கின் சம்பவங்களைச் சுவாரசியம் ஆக்குவதற்காக டீஸ்டா செடல்வாட் சில பொய்யான வன்முறை வழக்குகளை உருவாக்கியுள்ளார் என்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக ஏப்ரல் 2009 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டது. கற்பனையில் உருவாக்கப்பட்ட சம்பவங்கள் பற்றி சான்றுகளை வழங்குவதற்காக பொய்யான சாட்சிகளுக்கு டீஸ்டா செடல்வாட்டும் அரசு சாரா நிறுவனங்களும் பயிற்சி அளித்தன என்று முன்னாள் CBI தலைவர் ஆர் கே ராகவன் தலைமையிலான SIT கூறியுள்ளது.[23] “இரக்கமற்ற கொலைக் கதைகளைக் கட்டுகின்றவர்" என்று SIT குற்றஞ்சாட்டியது.[24]
SIT ஆல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட, வெவ்வேறு நீதிமன்றங்களின் முன்னிலையில் கலவரம் குறித்த சம்பவங்களைப்பற்றி ஒரேமாதிரியான வாக்குமூலங்களையே வழங்கிய 22 சாட்சிகளும் உண்மையில் சம்பவத்தைப் பார்த்த சாட்சியங்கள் இல்லையென்றும், அவர்களுக்கு பயிற்சி கொடுத்த செடல்வாட்டால் வழங்கப்பட்ட வாக்குமூலங்களையே அவர்கள் ஒப்புவித்துள்ளார்கள் என்றும், நீதிமன்றத்துக்குக் கூறப்பட்டது.[24]
நீதிபதிகள் அரிஜித் பசாயத், பி சதாசிவம் மற்றும் அப்தாப் அலாம் ஆகியோரடங்கிய பெஞ்ச் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட அறிக்கையில், கர்ப்பிணியான முஸ்லீம் பெண் கௌசர் பானு முரட்டுக்குழுவால் கற்பழிக்கப்பட்டு அவரது கருவானது கூரிய ஆயுதங்களால் வயிற்றைக் கிழித்து அகற்றப்பட்டது என்று அதிகளவில் பேசப்பட்ட வழக்கும் சித்தரிக்கப்பட்டது, பொய்யானது என்று குறிப்பிடப்பட்டது.[23][25]. ஆனாலும் இறந்த முஸ்லீம் பெண்ணின் கணவர், தனது மனைவியின் கருப்பை கொலையாளியினால் அகற்றப்பட்டைருந்தும்கூட, மருத்துவர்கள் தமது பிணப்பகுப்பாய்வில் அதனைத் தவறாகவே குறிப்பிட்டுள்ளனர் என்று கூறினார்[26]. ஆனால் இதனை ஆராய்ந்த நீதிமன்றம், அந்தப் பெண்ணும் அவரது வயிற்றிலிருந்த கருவும் கொல்லப்பட்டது உண்மையென்றும், ஆனால் கொலையாளி கருவை வயிற்றிலிருந்து அகற்றினார் என்பதற்குத் தகுந்த ஆதாரமில்லையென்றும் கூறியது[27].
ஒரு நாளின் பின்னர், விசாரணையிலுள்ள அறிக்கையானது SIT அறிக்கை அல்ல, அது குஜராத் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அறிக்கை எனக் கூறுகின்ற, நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (CJP) அமைப்பிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டது.[28]. டைம்ஸ் இல் முதலில் வெளிவந்த கட்டுரையின் ஆசிரியர் "CJP குறிப்பிட்டது போல எனது அறிக்கை குஜராத் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது அல்ல, அது SIT அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது" என்று பதிலளித்தார். TOI க்கு அந்த அறிக்கைக்கான அணுக்கம் இருப்பதால், ஊடகத்தின் வேறு எந்தப் பிரிவிடமும் அந்த அறிக்கை உள்ளதா அல்லது இல்லையா என்ற விடயம் தொடர்பற்றது எனக் கூறப்பட்டது.[29]
டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்துக்கூறிய ஆரம்பச் செய்தியில் இருந்த ஓட்டைகளை திலிப் டி'சௌஸா கண்டுபிடித்துவிட்டார். நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அனுப்பிய செய்திக்கு மறுப்புரை விடுத்த டி'சௌஸா, "உண்மையில்லாதது" என SIT கண்டுபிடித்துவிட்டதாக செய்தியாளர் உண்மையில் கோரிய மூன்று "பரவலாக அறியப்பட்ட" சம்பவங்களை அவர் படிக்கக்கூட இல்லை என குறிப்பிடுகிறார்.[30]
இந்துஸ்தான் டைம்ஸி ல் வந்த ஒரு செய்தி TOI அறிக்கை பற்றி கேள்வி எழுப்பியது. SIT இன் தலைவர் ஆர்.கே. ராகவன் அறிக்கை வெளியில் வந்தது குறித்து இவ்வாறு குற்றங்கூறினார், "குறிப்பிட்ட அறிக்கை வெளிக்கசிந்துள்ளமை நம்பகமற்ற உள்நோக்கங்களால் தூண்டப்படுகின்றதாகத் தெரிகிறது. இதுபோன்ற உரிமைகோரல்களை என்னால் உறுதிப்படுத்த முடியாது. இந்தச் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது" என்றார். அறிக்கைகளை[31] மறுக்கவோ உறுதிப்படுத்தவோ அவர் மறுத்தார். SIT அறிக்கை வெளிக்கசிந்தமை 'நம்பிக்கைத் துரோகமானது' என உச்ச நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது.[32]
வரவேற்பு
டீஸ்டா செடல்வாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என்றால் நீதிக்கு திருத்தவே முடியாத கேட்டை அவர் விளைவித்துவிட்டார் என்று புதுடில்லி கொள்கை ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், தேசிய அறிவுசார் ஆணையம் முன்னாள் உறுப்பினருமான, பிரதாப் பானு மேத்தா டீஸ்டா செடல்வாட்டைக் குறைகூறினார். கலவர வழக்கு[33] விசாரணைகளில் பொது சமூகமானது பாரபட்சமற்ற உத்தரவாதம் எதையேனும் கொண்டிருக்கக்கூடிய தகுதி குழிதோண்டிப் புதைக்கப்படும் என விவரித்தது போல, அவர் டீஸ்டா செடல்வாட்டின் செயற்பாடுகளைக் கவனித்தார். இந்திய குடியரசின் நம்பிக்கைகளின் அத்திவாரத்தையே அவரின் செயல்பாடு குழிதோண்டிப் புதைத்துவிட்டதாக மற்றவர்கள் கூறியுள்ளனர்[34]
செயல்முனைப்பு
- கம்யூனலிஸம் கம்பட் சஞ்சிகையின் துணை ஆசிரியர் (கணவர் ஜேவ்ட் ஆனந்துடன் சேர்ந்து).
- டீஸ்டாவின் கணவர் ஜேவ்ட் ஆனந்த் சப்ராங் தகவல்தொடர்பை நடத்துகிறார், இது மனித உரிமைகளுக்காக தாம் போராடுவதாகக் கூறுகிறது. இந்த நிறுவனத்தில் அதிகாரபூர்வ பேச்சாளர் டீஸ்டா.
- டீஸ்டா மும்பையில் இயங்கும் அரசு சாரா நிறுவனம் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (CPJ) அமைப்பின் தலைவராவார், இதில் அவரின் தந்தையும் உறுப்பினராக உள்ளார். இந்த நிறுவனத்துக்கு மும்பையிலுள்ள பல முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்களாக உள்ளனர்.[35]
- பெண்கள் மற்றும் ஊடக சபையின் ஸ்தாபகர்.[36] "'பணியாற்றும் பெண் ஊடகவியலாளர்கள் அனைவரும் ஒன்றாக தொழில் சம்பந்தமான கருத்துக்களையும், பாலின- உணர்திறன் விழிப்புணர்வையும் எழுத்துக்களில் கொண்டுவந்து பெண்கள் சம்பந்தமான பிரச்சனைகளை அறிக்கைகளாகக் கொண்டுவர" இந்த குழு நாடுகிறது.
- கம்யூனலிஸத்துக்கு எதிரான ஊடகவியலாளர்களின் ஸ்தாபகர்.[36]
- ஊடகவியலாளர் குறித்த காரியங்கள் தவிர, டீஸ்டா செடல்வாட் “கோஜ்: கூட்டான இந்தியாவுக்கான கல்வி” திட்டத்தையும் கொண்டுநடத்தினார்.[37]
- டீஸ்டா மனித உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் (PUHR) பொதுச் செயலாளர்.[37]
- சமாதானம் மற்றும் ஜனநாயகத்துக்கான பாகிஸ்தான் இந்திய மக்கள் மன்ற உறுப்பினர்.[37]
விருதுகள்
2007 பத்ம ஸ்ரீ தவிர, டீஸ்டா செடல்வாட் பின்வரும் விருதுகளைப் பெற்றார்:
- இந்திய முசுலிம்கள் சங்கங்களின் கூட்டமைப்பு விருது (2009)
- நானி ஏ. பால்கிவாலா விருது 2006.[38]
- கண்காணிப்பு இந்திய இயக்கத்தின் 2004 எம்.ஏ. தாமஸ் தேசிய மனித உரிமை விருது
- உலக செயற்பாடுகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் 'ஜனநாயகக் காவலர்' விருது ,[39] நியூசிலாந்து பிரதம மந்திரி ஹெலன் கிளார்க்குடன் சேர்ந்து பெற்றது.[40]
- பன்னாட்டு நூரம்பர்க் மனித உரிமைகள் விருது 2003.[41]
- இந்தியா, குஜராத்தில் பிப்ரவரி - ஜூலை 2002 இல் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களைத் தனிப்படுத்தி உதவியதற்காக ராஜிவ் காந்தி விருது (ஹார்ஷ் மாண்டருடன் சேர்ந்து).[2]
- 2000 இல் தலித் விடுதலைக் கல்வி அறக்கட்டளையின் மனித உரிமைகள் விருது.[2]
- 1999 இல் மஹாரனா மேவார் ஃபௌண்டேஷன் ஹக்கிம் கான் சுர் விருது (ஜேவ்ட் ஆனந்துடன் சேர்ந்து).[2]
- மனித உரிமைகளுக்கான PUCL ஊடக விருது 1993.[2]
- தலைசிறந்த பெண் ஊடகவியலாளருக்கான சாமலி தேவி ஜெய்ன் விருது 1993.[2]
- பாக்ஸ் கிறிஸ்டி சர்வதேச சமாதான விருது (ஆஸ்திரேலிய கலைஞர் எட்டீ நீபோனுடன் சேர்ந்து).[2]
வெளி இணைப்புகள்
- டீஸ்டா செடல்வாட்: தி சாம்பியன் ஆஃப் அண்டி நேஷன் அண்ட் அண்டி ஹிண்டு NGO இண்டஸ்ட்ரி இன் இந்தியா
- இந்தியா: தி கன்ஸ்டிடியூஷனல் மண்டேட் அண்ட் எட்யுகேஷன் - கட்டலிஸ்ட் சஞ்சிகை யில் டீஸ்டா செடல்வாட் எழுதிய கட்டுரை (ஜனவரி2006)
மேற்கோள்கள்
- "Teesta Setalvad". Human Rights office of the city of Nuremberg.
- "Nürnberger Menschenrechtspreisträger 2003". (செருமன் மொழி)
- "India THE NEXT DECADE".
- http://www.freeindiamedia.com/women/3_may_04_women.htm
- Nuremberg Speech
- நுரம்பெர்க் ஸ்பீச்
- http://www.ksghauser.ஹர்வார்ட்.edu/socialmovementsworkshops/includes/Personal%20History%20டீஸ்டா.doc
- கம்யூனலிஸம் கம்பட் கம்பிளீட்ஸ் எ டிகேட்
- http://india.gov.in/myindia/advsearch_awards.php
- "About Us" (n.d.). பார்த்த நாள் 27 April 2013.
- us, About. "About us". Citizens for Justice and Peace.
- Dutta, Bhaskar (2009). New and enduring themes in development economic. World Scientific Publishing. பக். 149. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9812839411.
- "Zakia Jafri-CJP Special Leave Petition"
- "SIT Closure Report"
- "Nandigram violence can't be justified: intellectuals". Hindustan Times.ட்
- "Teesta interview 1999"
- http://www.thehoot.org/story.asp?storyid=Web21021416663Hoot115732%20PM898&pn=1
- தி ஹிண்டு : கேரளா / திருவனந்தபுரம் நியூஸ் : மைனாரிட்டீஸ் ஸ்டில் லிவிங் இன் ஃபியர் இன் குஜராட்: செடல்வாட்
- டீஸ்டா'ஸ் யு.எஸ் டெஸ்டிமோனி
- கூகிள் ஆர்ச்சிவ் ஸ்கூல் டெக்ஸ்ட்புக் சேஞ்ச்
- என்.ஜி.ஓஸ், டீஸ்டா ஸ்பைஸ்ட் அப் குஜராட் ரையட் இன்சிடண்ட்ஸ்: SIT
- செடல்வாட் இன் டொக் ஃபார் 'குக்கிங் அப் கில்லிங்ஸ்'
- http://dailypioneer.com/169490/Gujarat-riot-myths-busted.html
- Manas Dasgupta. "Judge rejects theory that Bajrangi killed foetus". http://archive.indianexpress.com/news/even-demons-have-shame-kausar-s-husband/994966/0.
- Ujjwala Nayudu. "Even demons have shame: Kausar’s husband". http://www.thehindu.com/news/national/other-states/judge-rejects-theory-that-bajrangi-killed-foetus/article3859939.ece.
- http://timesofindia.indiatimes.com/India/Guj-govts-not-an-SIT-report/articleshow/4407434.cms
- http://timesofindia.indiatimes.com/India/Report-based-on-SIT-findings/articleshow/4407437.cms
- http://kafila.org/2009/04/19/about-warped-minds/
- நாகேந்திர ஷர்மா, குஜராட் ரையட்ஸ் விட்னெஸஸ் நாட் டூட்டர்ட்: SIT, ஏப் 22, 2009, ஹிண்டுஸ்டான் டைம்ஸ்,
- SC டிப்ளோர்ஸ் லீக்கேஜ் ஆஃப் SIT ரிப்போர்ட் ஆன் குஜராட் ரையட்ஸ்:PTI
- பானு பிரதாப் மேத்தா, அன் அன்கன்சியனபிள் ஆக்ட், ஏப் 15, 2009, இந்தியன் எக்பிரஸ்,
- டெம்பரிங் வித் எவிடென்ஸ் பிரகதி - மே 2009
- சிட்டிசன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் (CJP)
- 403 பார்பிடன்
- "Die Verantwortung der Medien - Journalisten zwischen Krieg und Frieden". (செருமன் மொழி)
- சிவில் லிபர்ட்டிஸ் இன் இந்தியா பை டீஸ்டா செடல்வாட்
- ஹர்வார்ட்
- பார்லிமெண்டரியன்ஸ் ஃபார் குளோபல் ஆக்ஷன்
- சப்ராங் ஆல்டர்னேட்டிவ் நியூஸ் நெட்வொர்க்