ஜனதா தளம்
ஜனதா தளம் (Janata Dal) இது ஒரு இந்திய அரசியல் கட்சியாகும், இக்கட்சி ஜனதா கட்சி மற்றும் பாரதிய லோக் தளம் என்ற இரு இந்திய அரசியல் கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டதாகும். (வி. பி. சிங் இந்தியத் தேசிய காங்கிரசில் இருந்து பிரிந்து வந்த பொழுது துவக்கப்பட்ட கட்சியாகும்).[1]

ஜனதா தளம் 1989 இந்திய தேசிய காங்கிரசின் தலைவரும் இந்தியப் பிரதமருமான ராஜிவ் காந்தி போபர்ஸ் ஊழல் குற்றசாட்டினால் தேர்தலில் தோல்வி கண்டதினால் இந்திய அரசின் ஆட்சிக்கு வந்தது. தேசிய முன்னணி என்ற கூட்டணி அரசாக பாரதீய ஜனதா கட்சி வெளியில் இருந்து ஆதரவு தந்த நிலையில் ஆட்சியில் பங்கு கொண்டது. வி. பி. சிங் இந்தியாவின் பிரதமராக இந்தியாவின் ஆட்சியில் பங்கு கொண்டார். 1990 இல் கூட்டணியின் பிளவால் புதிய அரசு சந்திரசேகர் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி நடத்தியது. சந்திரசேகர் ஜனதா தள மூத்த தலைவர்களில் ஒருவராவர். ஜனதா தளம் கட்சி வி. பி. சிங் தலைமையில் இயங்கியது. ஆனால் குறுகிய காலமே ஆட்சியில் பங்கு பெற்றது. கூட்டணி விரிசலினால் விரைவிலேயே தேர்தலை சந்திக்க நேர்ந்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழல் உருவானது.