சோசப்பு பிரோசு டிட்டோ

சோசப்பு பிரோசு டிட்டோ ( Josip Broz Tito 7 மே 1892 -4 மே 1980) என்பவர் யுகோசுலாவியா நாட்டின் அரசியல்வாதி, பொதுவுடைமையாளர், மற்றும் அரசின் தலைவர் ஆவார். 1943 ஆம் ஆண்டு முதல் அவரது இறுதிக்காலம் வரை பல்வேறு அரசியல் பணிகளில் ஈடுபட்டவர்.[1] டிட்டோ அணிசேரா நாடுகள் அமைப்பில் முக்கியப் பங்கு வகித்து இருந்தார். இந்தியப் பிரதமர் சவகர்லால் நேரு, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்ணோ ஆகியோருடன் இணைந்து இயங்கியவர்.[2] நன்மைகள் செய்யும் ஏதேச்சத் தலைவர் என்று மதிக்கப்பட்டார்.

படைத்தலைவர்
யோசிப் புரோசு டிட்டோ
Josip Broz Tito
1961 இல் டிட்டோ
யுகோசுலாவியாவின் அரசுத்தலைவர்
பதவியில்
14 சனவரி 1953  4 மே 1980
பிரதமர் இவரே (1953–1963)
பீட்டர் இசுத்தாம்போலிச் (1963–1967)
மிக்கா இசுப்பியாக் (1967–1969)
மித்சா ரிபிச்சிச் (1969–1971)
த்சேமல் பிசேடிச் (1971–1977)
வெசெலின் துரனோவிச் (1977–1980)
துணை குடியரசுத் தலைவர் அலெக்சாந்தர் ரான்கோவிச் (1963–1966)
கோச்சா பப்போவிச் (1966–1967)
முன்னவர் இவான் ரிபார்
(மக்கள் பேரவைத் தலைமைப்பீடத்தின் தலவராக)
பின்வந்தவர் லசார் கொலிசேவ்சுக்கி
19-வது யுகோசுலாவியப் பிரதமர்
பதவியில்
2 நவம்பர் 1944  29 சூன் 1963
குடியரசுத் தலைவர் இவான் ரிபார்
முன்னவர் இவான் சுபாசிச்
பின்வந்தவர் பீட்டர் இசுத்தாம்போலிச்
அணிசேரா இயக்கத்தின் 1-வது பொதுச் செயலர்
பதவியில்
1 செப்டம்பர் 1961  5 அக்டோபர் 1964
முன்னவர் பதவு உருவாக்கம்
பின்வந்தவர் ஜமால் அப்துல் நாசிர்
பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
7 மார்ச் 1945  14 சனவரி 1953
பிரதமர் இவரே
முன்னவர் இவான் சுபாசிச்
பின்வந்தவர் இவான் கோசுனியாக்
யுகோசுலாவிய கம்யூனிஸ்டுகள் முன்னணியின் 4-வது தலைவர்
பதவியில்
5 சனவரி 1939  4 மே 1980
முன்னவர் மிலான் கோர்க்கிச்
பின்வந்தவர் பிராங்கோ மிக்கூலிச்
தனிநபர் தகவல்
பிறப்பு யோசிப் புரோசு
மே 7, 1892(1892-05-07)
கும்ரோவிச், குரோவாசிய-சுலோவீனிய இராச்சியம், ஆத்திரியா-அங்கேரி
இறப்பு 4 மே 1980(1980-05-04) (அகவை 87)
லியுப்லியானா, சுலோவீனியா, யுகோசுலாவியா
அடக்க இடம் பெல்கிறேட், செர்பியா
44°47′12″N 20°27′06″E
அரசியல் கட்சி யுகோசுலாவிய கம்யூனிஸ்டுகள் முன்னணி
RCP (b)
துணைவர் தவோர்யான்கா பவுனோவிச்
பிள்ளைகள் சிலாத்திக்கா
இன்கோ
சார்க்கோ லியோன்
அலெக்சாந்தர் புரோசு
பணி எந்திர வினைஞர், புரட்சியாளர், எதிர்ப்புத் தளபதி, அரசியல்வாதி
இனம் குரோவாசியர்
கையொப்பம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு  ஆஸ்திரிய-அங்கேரி
 உருசிய சோவியத் குடியரசு
 யுகோசுலாவியா
கிளை ஆத்திரிய-அங்கேரிய இராணுவம்
செஞ்சேனை
யுகோசுலாவ் மக்கள் இராணுவம்
பணி ஆண்டுகள் 1913–1915
1918–1920
1941–1980
தர வரிசை படைத்தலைவர்
படைத்துறைப் பணி தேசிய விடுதலை இராணுவம்
யுகோசுலாவ் மக்கள் இராணுவம் (உயர் தலைவர்)
சமர்கள்/போர்கள் முதலாம் உலகப் போர்
உருசிய உள்நாட்டுப் போர்
இரண்டாம் உலகப் போர்

வாழ்க்கைக் குறிப்புகள்

டிட்டோ குரோசியாவுக்கு அருகில் ஒரு சிற்றூரில்  ஏழை   விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். உரோமன் கத்தோலிக்க முறையில் வளர்ந்தார். எட்டாவது அகவையில் பள்ளியில் சேர்ந்து படித்தார். நான்கு ஆண்டுகளே பள்ளியில் படித்தார். [3] பின்னர் மெக்கானிக் வேலையில் சேர்ந்து பணி செய்தார். முதலாம் உலகப் போர் நடந்த கால கட்டத்தில்  1913 இல் ஆத்திரியா அங்கேரி இராணுவத்தில் சேர்ந்தார்.  செர்பியாவுக்கு எதிரான போரில் காயமுற்று இரசியப் படையால் பிடிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனையில் இருந்தபோது போல்செவிக் கொள்கை பற்றி அறிய வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

மேற்கோள்

  1. "Josip Broz Tito". Encyclopædia Britannica Online. பார்த்த நாள் 27 April 2010.
  2. Peter Willetts, The non-aligned movement: the origins of a Third World alliance (1978) p. xiv
  3. Swain 2010, பக். 5.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.