சூல்வித்தகம்
சூல்வித்தகம் (அல்லது நஞ்சுக்கொடி) (Placenta) என்பது, விருத்தியடைந்து வரும் கருவானது, தாயிடமிருந்து குருதி வழங்கல் மூலம், ஊட்டச்சத்து பெறுவதற்காகவும், கழிவுகளை அகற்றுவதற்காகவும், வளிமப் பரிமாற்றத்திற்காகவும், தாயின் கருப்பைச் சுவருடன் இணைத்து வைக்கப் பயன்படும் ஒரு உறுப்பாகும். நஞ்சுக்கொடிகள் யுதரியன் அல்லது “பிளசெண்டல்” பாலூட்டிகளுடைய வரையறுக்கும் குணாதசியமாகும். ஆனால் இவை பாம்புகள் மற்றும் பல்லிகளிலும் பாலூட்டிகள் அளவுவரை வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் காணப்பட முடியும்[1]. பிளசெண்டா என்ற வார்த்தை லத்தீன் மொழியில் கேக் என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. கிரேக்க மொழியில் plakóenta/plakoúnta , plakóeis/plakoús – πλακόεις, πλακούς என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டு, “தட்டையான, பலகை-போன்ற” என்றுக் குறிக்கிறது.[2] இது மனிதர்களில் அதன் உருண்டை மற்றும் தட்டை வடிவத்தைக் குறிக்கிறது. பிரோதிரியல் (முட்டையிடும்) மற்றும் மெட்டாதிரியல் (பையுள்ள) பாலூட்டிகள் ஒரு கொரியொவிடலின் நஞ்சுக்கொடியை உற்பத்தி செய்கின்றன. கருப்பை சுவற்றுடன் இவை இணைந்திருக்கும்போது, முட்டைப் பையிலிருந்து பெறப்பட்ட ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன. நஞ்சுக்கொடியானது கருவுண்டாகும் அதே விந்து மற்றும் முட்டையணுக்களிலிருந்தே உருவாகிறது. இது கருப்பகுதி (கோரியான் ஃப்ரண்டாசம்) மற்றும் தாய்மைபகுதி (டெசிடுஆ பேசலிஸ்) ஆகிய இரண்டு உட்பொருள்கள் கொண்டு ஒரு தாய்மைக்கரு உறுப்பாக வேலை செய்கிறது.
Placenta | |
---|---|
![]() | |
Placenta | |
Precursor | decidua basalis, chorion frondosum |
வடிவம்
மனிதர்களில், நஞ்சுக்கொடியானது, 22 செமீ (9 அங்குலம்) நீளம் மற்றும் 2-2.5 செமீ (0.8-1 அங்குலம்) தடிமானம் (மையத்தில் மிக அதிக பருமனாகவும் ஓரங்களில் செல்லச்செல்ல மெலிந்துக் காணப்படுகிறது) கொண்டதாக இருக்கிறது. இது பொதுவாக 500 கி (1 பவுண்ட்) எடையுள்ளதாக இருக்கிறது. ஆழமான சிவப்பு-நீள நிறம் அல்லது அரக்கு (மெரூன்) நிறம் கொண்டிருக்கிறது. இது சுமார் 55-60 செமீ (22–24 விரலம்) நீளம் கொண்ட ஒரு தொப்புட்கொடி மூலமாக கருவுடன் சேர்கிறது. இதில் 2 தமனிகளும் ஒரு சிரையும் காணப்படுகிறது.[3] தொப்புட்கொடியானது கோரியானிக் தட்டில் இணைகிறது (மையம் பிறழ்ந்த இணைப்பு). நஞ்சுக்கொடியின் பரப்பளவிற்கு மேல் இரத்த நாளங்கள் பிரிகின்றன. அவை மேலும் பிரிந்து உயிரணுக்களின் ஒரு மெல்லிய படலத்தால் மூடப்பட்ட ஒரு பிணையமாகின்றன. இதன் விளைவாக சடை போன்ற அமைப்புகள் உண்டாகின்றன. தாய்மைப் பக்கத்தில், இந்த சடை போன்ற அமைப்பு வித்திலைகள் (காட்டிலிடான்) என்றழைக்கப்படும் நுண்வளைகளாக சேர்க்கப்படுகின்றன. மனிதர்களில் நஞ்சுக்கொடி பொதுவாக தட்டு வடிவத்தில் இருக்கிறது, ஆனால் பல்வேறு பாலூட்டி இனங்களில் இதன் வடிவம் வெவ்வேறாக காணப்படுகிறது.[4]
வளர்ச்சி

இளம்கருவளர் பருவம் (பிளாஸ்டோசிஸ்ட்) தாய் கருப்பையகத்திற்குள் பொருந்தியபின் நஞ்சுக்கொடி உருவாக ஆரம்பிக்கிறது. பிளாஸ்டோசிஸ்டின் வெளிப்படலம் ஊட்டுறையாகிறது. இதுவே நஞ்சுக்கொடியின் வெளிப்படலமாகிறது. இந்த வெளிப்படலம் மேலும் இரண்டு படலங்களாக பிரிக்கப்படுகிறது: அடியிருக்கும் சைட்டோ ஊட்டுறை படலம் மற்றும் மேலிருக்கும் சின்சைட்டியோ ஊட்டுறை படலமாகும். சின்சைட்டியோ ஊட்டுறை நஞ்சுக்கொடியின் மேல்பரப்பை மூடும் ஒரு பல்கரு தொடர் அணுப் படலமாகும். இது கீழிருக்கும் சைட்டொ ஊட்டுறை அணுக்களின் பிரிவு மற்றும் இணைதலின் விளைவாக உருவாகிறது. இது நஞ்சுக்கொடியின் வளர்ச்சிப்பருவம் முழுவதும் தொடரும். சின்சைட்டியோ ஊட்டுறை (பல்கரு முதலுரு என்றும் அழைக்கப்படுவது) இப்படியாக நஞ்சுக்கொடியின் தடைசெய்யும் வேலையை செய்கிறது.
நஞ்சுக்கொடி பிரசவக்காலம் முழுவதும் வளர்கிறது. பேறுகாலத்தின் முதல் மூன்றுமாதங்களின் முடிவுக்குள் (சுமார் 12-13 வாரங்கள்) நஞ்சுக்கொடிக்குத் தாயிடமிருந்து இரத்த வழங்கல் முழுவதுமாக துவங்கிவிடுகிறதென்று கருதப்படுகிறது.
நஞ்சுக்கொடி சுழற்சி
தாயின் நஞ்சுக்கொடி சுழற்சி
உட்பொருத்தலுக்கு தயாராகும் வகையில், கருப்பையின் உள்வரிச்சவ்வு ‘உதிர்கிறது’. வளர்பை சவ்விலுள்ள சுழல் தமனிகள் மறு உருவடைகின்றன. இதனால் அவற்றிலுள்ள முறுக்கு குறைந்து அவைகளுடைய விட்டம் அதிகரிக்கின்றது. இது நஞ்சுக்கொடிக்கு தாயிடமிருந்து இரத்த வழங்கலை அதிகரிக்கிறது. மேலும் வெட்டு விசை குறையுமாறு எதிர்ப்பையும் குறைக்கின்றது. சுழல் தமனிகளூடாக தாயின் இரத்தம் விரலிகளினிடையே புகும்போது ஏற்படும் அதி அழுத்தத்தால் விரலிகள் இரத்தத்தில் தோய்ந்துவிடுகின்றன. இங்கு வாயுபரிமாற்றம் நடைபெறுகிறது. அழுத்தம் குறையும்போது, கருப்பை சிரைகள் வழியே பிராணவாயுவற்ற இரத்தம் பின்னடைகிறது.
நிறைமாசத்தின்போது தாயிடமிருந்தான இரத்த வழங்கல் சுமார் 600-700 மிலி/நிமிடமாக இருக்கிறது.
கருவில் நஞ்சுக்கொடி சுழற்சி
பிராணவாயுவற்ற கரு இரத்தம் தொப்புள் தமனிகள் வழியாக நஞ்சுக்கொடிக்கு செல்கின்றது. தொப்புட்கொடியும் நஞ்சுக்கொடியும் சேர்கின்ற இடத்தில், தொப்புழ்த் தமனிகள் ஆரைகளைப் போன்று கிளைவிட்டு கோரியானிக் தமனிகள் உருவாகின்றன. விரலிகளுக்குள் நுழைவதற்கு முன் கோரியானிக் தமனிகளும் பிரிகின்றன. விரலிகளில், அவை ஒரு பரவலான தமனிநுண்புழை சிரை அமைப்பாக உண்டாகி, கருவின் இரத்தத்தை தாயின் இரத்தத்திற்கு மிகவும் அருகே கொண்டு வருகிறது; ஆனால் கரு மற்றும் தாயின் இரத்தம் எந்தவிதத்திலும் கலப்பதில்லை ("நஞ்சுக்கொடி தடை"[5]).
செயல்பாடுகள்
ஊட்டச்சத்து
நஞ்சுக்கொடியின் விரலிகளினிடையேயுள்ள இடங்களில் தாயின் இரத்தம் செல்வதால் ஊட்டச்சத்துப் பொருட்களும் பிராணவாயுவும் தாயிடமிருந்து கருவுக்கு செல்ல முடிகிறது. மேலும் கழிவுப்பொருட்களும் கார்பன் டையாக்சைடும் கருவிலிருந்து தாயிடம் வரவும் ஏதுவாகிறது. நஞ்சுக்கொடியணுக்களுக்குள் வெளிப்படுத்தப்படுகிற ஊட்டச்சத்து ஏந்திகள் என்று அழைக்கப்படும் புரதங்கள் கருவிற்கு ஊட்டச்சத்துகள் கொண்டு செல்வதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்கிறது.
தாய்க்கு நீரிழிவு அல்லது உடல்பருமன் போன்று எதிரிடையான கர்ப்பகால சூழ்நிலைகள், நஞ்சுக்கொடியிலுள்ள ஊட்டச்சத்து ஏந்திகளின் அளவை அதிகரிக்க அல்லது குறைக்க செய்யலாம். இதனால் கருவானது அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக வளர்கிறது.
வளர்சிதை மற்றும் உட்சுரப்பு செயல்பாடு
வாயுகள் மற்றும் ஊட்டச்சத்துகளை கடத்துவதோடு நஞ்சுக்கொடியானது வளர்சிதை மற்றும் உட்சுரப்பு வேலைகளையும் செய்கிறது. கர்ப்பத்திற்கு முக்கியமான புரொஜெஸ்டிரோனோடு மற்ற ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது; தாயின் இரத்தத்தில் குளுக்கோஸ் மற்றும் கொழுப்புப்பொருட்களின் அளவை அதிகரிக்க செயல்படும் சொமடோமாமோடிராபின் (நஞ்சுக்கொடி லாக்டோஜன் என்றும் அழைக்கப்படுகிறது); ஈஸ்டிரோஜன், ரிலாக்சின் மற்றும் பீடா மனித கோரியானிக் கொனடோடிராபினையும் (பீட்டா- எச்.சி.ஜி (hCG)) உற்பத்தி செய்கிறது. இதனால் கருவுக்கு ஊட்டச்சத்துகள் அதிகமாக அளிக்கப்படுகிறது. பேறுகாலத்தின் போது அதிகரித்த இரத்த சர்க்கரை அளவுகள் காணப்படுவதற்கும் இதுவே காரணமாகும். இந்த ஹார்மோன் (பீட்டா- எச்.சி.ஜி) பிரொஜெஸ்டிரோனும் ஈஸ்டிரோஜெனும் சுரக்கப்படுவதை உறுதி செய்கிறது; பிரொஜெஸ்டிரோனும் ஈஸ்டிரோஜெனும் கருப்பை உட்சுவரை தடிமனாக பாதுகாத்து மேலும் முட்டைகள் உற்பத்தி மற்றும் வெளியிடப்படுவதை தடைசெய்கின்றன. எனினும் சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு நஞ்சுக்கொடி பிரொஜெஸ்டிரோன் உற்பத்தி செய்கின்ற வேலையை எடுத்துக்கொள்வதால், பீட்டா- எச்.சி.ஜி மேலும் தேவைப்படுவதில்லை. பீட்டா- எச்.சி.ஜி சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது. கர்ப்ப பரிசோதனைகள் இவைகளையே கண்டறிகின்றன. இது இன்சுலின் - போன்ற வளர்ச்சிக் காரணிகளையும் (ஐ.ஜி.எஃப்கள்) உற்பத்தி செய்கிறது.
தாயின் நோயெதிர்ப்பு மண்டலத்திலிருந்து பாதுகாப்பு
- மேலும் தகவல்களுக்கு: Immune tolerance in pregnancy
நஞ்சுக்கொடியும் கருவும் தாய்க்குள் இருக்கும் தன்னினத்தோல் ஒட்டாக (அலோகிராஃப்ட்) கருதப்படலாம். ஆகவே இவை தாயின் நோய் எதிர்ப்பு மண்டலம் மூலமாக தாக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
இதற்காக நஞ்சுக்கொடி பல யுக்திகளை கையாளுகிறது:
- அது ஃபாஸ்ஃபோகொலீன் மூலக்கூறுகளுள்ள நியுரோகினின் பி-யை சுரக்கிறது. இது ஒட்டுண்ணி நூற்புழுக்கள் தங்களுடைய விருந்தோம்பியுடைய நோயெதிர்ப்பு மண்டலத்தால் கண்டறியப்படுவதைத் தவிர்க்க பயன்படுத்தும் அதே யுக்தியாகும்.[6]
- மேலும் கருவில் சிறிய லிம்ஃபோசைட்டிக் அடக்கி அணுக்களிருக்கின்றன. இவை இண்டர்லூகின் 2ற்கான பதிலளிப்பை அடக்கி தாயின் செல்நச்சிய T அணுக்களை அடக்குகின்றன.[7]
எனினும் நோயெதிர்ப்பு மண்டலத்தை தவிர்க்க நஞ்சுக்கொடி தடுப்பு மட்டுமே கிடையாது. ஏனென்றால் அயற்பொருள் கரு அணுக்கள் நஞ்சுக்கொடி தடுப்பின் மற்ற பக்கத்தில் தாயின் ஓட்டத்திலும் காணப்படத் தான் செய்கிறது.[8]
பிறப்பு
கரு பிறக்கும்போது, அதன் நஞ்சுக்கொடியானது அப்புறம் தானாக வெளியேறுவதற்கான உடற்கூறியல் பிரிவு துவங்குகிறது (இதற்காகவே இதன் பெயர் பிறப்புக்குப் பின் என்றழைக்கப்படுகிறது). மனிதர்களில், தொப்புள்கொடியானது வழக்கமாக இடுக்கிடப்பட்டு நஞ்சுக்கொடி வெளியேறுவதற்கு முன், குழந்தைப் பிறப்பிற்கு சில நிமிடங்கள் அல்லது நொடிகளில் துண்டிக்கப்படுகிறது. இது ‘மூன்றாம் நிலையின் செயலார்ந்த மேலாண்மை’ என்று மருத்துவ நெறிமுறையில் அறியப்பட்டு இயற்கை பிறப்பை முன்வைப்போர்களால் வாதிக்கப்படுகிறது. அவர்கள் இதை ‘மூன்றாம் நிலையின் உயிர்ப்பற்ற மேலாண்மை’ என்று கூறுகின்றனர்.[9] அடிவயிற்றின் முன்னே அதன் நடுவில் தொப்புட்கொடி இருந்த இடம் தொப்புள் அல்லது நாபி எனப்படுகிறது.
நவீன மகப்பேறுயியல் தாயிறப்புகளை வெகுவாக குறைத்திருக்கிறது. மகப்பேற்றின் மூன்றாம் நிலையின் செயலார்ந்த மேலாண்மை இதற்கு வெகுவாக பங்களித்துள்ளது. இதில் ஐ.எம் ஊசி மூலம் ஆக்சிடாசின் அளிப்பது உட்படுகிறது. இதைத் தொடர்ந்து நஞ்சுக்கொடியை வெளியெடுக்க தொப்புழ்க் குடி இழுப்பும் உட்படும். காலத்திற்கு முன்பு தொப்புட்கொடியை இழுப்பது கருப்பை சுவரிலிருந்து இயற்கையாகவே தொடர்பறுவதற்கு முன் நஞ்சுக்கொடியை இழுப்பதால், இரத்தப்போக்கு நேரிடலாம். செயலார்ந்த மூன்றாம் நிலையின் பலன்களின் கொக்ரேன் குழுவின் தொகுப்பாய்வை (2000) பி.எம்.ஜே பின்வருமாறு சாராம்சம் செய்தது:
"கட்டுப்படுத்தப்பட்ட தொப்புழ்க்கொடி இழுப்பு, ஆரம்பநிலையில் தொப்புழ்க்கொடியை இடுக்கிடுவதுடன் கசியவிடுவது மற்றும் முற்காப்பு ஆக்சிடாக்சிக் செயலி ஆகியவை உட்பட்ட பேறுகாலத்தின் மூன்றாம் நிலையின் செயலார்ந்த மேலாண்மை 500 அல்லது 1000மிலி பேற்றுக்குப்பின்னான இரத்த ஒழுக்கை அல்லது சராசரி இரத்த இழப்பு, 9 கி/டெலிக்கு கீழான பேற்றுக்குப்பின்னான ஹீமோகுளோபின் அளவு, இரத்த ஏற்றம், பேற்றுக்குப் பின் துணைசேர்க்கை இரும்பு சக்தியின் தேவை ஆகியவை உட்பட்ட அதிகரித்த அல்லது சம்பந்தப்பட்ட நோய்நிலைகளை மற்றும் பேறுகாலத்தின் மூன்றாம் நிலையையும் குறைக்கிறது என்று ஒரு முறையான மறு ஆய்வு கண்டுபிடித்துள்ளது. குமட்டல், வாந்தி மற்றும் தலைவலி போன்ற எதிரிடை விளைவுகளை செயலார்ந்த மேலாண்மை அதிகரித்தாலும், தங்களுடைய பேறுகாலத்தின் மூன்றாம் நிலை செயலார்ந்த முறையில் மேலாண்மை செய்யப்படுவதில் பெண்கள் அதிருப்தி தெரிவித்ததாக மறு ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட ஒரு RCT கண்டுபிடித்தது".
நஞ்சுக்கொடி தங்கிவிட்டால் இரத்தப்போக்கு மற்றும் நோய்த்தொற்று ஆகியவைத் தோன்றக்கூடிய அபாயங்களில் அடங்கும். ஒரு மருத்துவ சூழலில் நஞ்சுக்கொடி வெளிவராமல் மிக அதிகமான இரத்தக்கசிவு ஏற்பட்டால் அதை கையில் எடுக்க வேண்டியிருக்கும். மேலும் நஞ்சுக்கொடியின் மீதம் (அரிதான சூழ்நிலைகளில் மிகவும் அதிகமான ஒட்டுந்தன்மையுள்ள நஞ்சுக்கொடி (நஞ்சுக்கொடி அக்ரெடா)) எதுவும் இருந்துவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய வளித்தெடுக்க வேண்டியிருக்கலாம். எனினும், பிறப்புமையங்களிலும் கவனிக்கப்பட்ட வீட்டு பிறப்பு சூழல்களிலும், அங்கிகரிக்கப்பட்ட கவனிப்பு வழங்குபவர்கள் சில நேரங்களில் 2 மணி நேரங்கள் வரை நஞ்சுக்கொடி வெளிவர காத்திருப்பதுண்டு.
மனிதரல்லாத மற்ற விலங்குகள்
விரிவாக்கம் தேவைப்படுகின்ற அனைத்து கட்டுரைகள்}} பெரும்பாலான பாலூட்டி இனங்களில், தாயானது தொப்புழ்க்கொடியை கடித்து நஞ்சுக்கொடியை சாப்பிட்டுவிடுகிறது. இது முக்கியமாக பிறப்பிற்குப்பிறகு கருப்பைக்கு கிடைக்கும் பிராஸ்டக்ளாண்டினின் பலனுக்காக ஆகும். இது ப்ளெசெண்டோஃபாகி என்றழைக்கப்படுகிறது. எனினும் விலங்கியலில் மனிதர்களோடு 94%-99% வரை மரபணுப் பொருளை பகிர்ந்துக்கொள்ளும் மனிதக்குரங்குகள் தங்கள் குழந்தைகளை பேணி பாதுகாக்கின்றன. மேலும் இவை கரு, தொப்புழ்க்கொடி மற்றும் நஞ்சுக்கொடி ஆகியவற்றை தக்க வைத்து தொப்புழ்க்கொடியானது காய்ந்து அடுத்த நாள் உடலிலிருந்து பிரியும்வரை காத்திருக்கின்றன.

நஞ்சுக்கொடியானது பெரும்பாலான பாலூட்டிகளிலும் சில ஊர்வனவற்றிலும் காணப்படுகிறது. ஒருவேளை இது பல்கணத்துக்குரியதாக இருக்கலாம்.
நோய்க்குறியியல்

பல நோய்க்குறிகள் நஞ்சுக்கொடியை பாதிக்கலாம்.
நஞ்சுக்கொடி மிகவும் ஆழமாக பொருந்திக்கொள்ளும் போது:
- நஞ்சுக்கொடி அக்ரேடா
- நஞ்சுக்கொடி ப்ரேவியா
- நஞ்சுக்கொடி தகர்வு
நஞ்சுக்கொடி சம்பந்தப்பட்ட நோய்த்தொற்றுகள்:
- டி.ஓ.ஆர்.சி.எச் (TORCH) நோய்த்தொற்றுகள் போன்ற நஞ்சுக்கொடியழற்சி.
- கோரியோஅம்னியானிடிஸ்.
மருந்துகளில் உபயோகம்
மனித நஞ்சுக்கொடி அதிகமதிகமாக மேற்கத்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. “நஞ்சுக்கொடி மருந்தியல்” என்ற ஒரு கிளை மருத்துவமே இருக்கிறது. மேலும் இது அவ்வபோது புதுப்பிக்கப்பட்டும் வருகிறது.[10] புண்களுக்கு சிகிச்சையளிப்பதில் இது திறமிக்கதாகவும் திசுக்களை மென்மையாக்கி மேலும் நன்றாக குணமாக்குவதாகவும் நிருபிக்கப்பட்டுள்ளது.
கலாசார வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள்
பல மனித கலாசாரங்களில், நஞ்சுக்கொடி, அவ்வப்போது மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. பல சமுதாயங்களில் நஞ்சுக்கொடியை அகற்றுவதில் சடங்குகள் செய்யப்படுகின்றன. பெரும்பாலும், மேற்கத்திய பகுதிகளில், நஞ்சுக்கொடி எறிக்கப்படுகின்றன.[11]
சில கலாசாரங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக நஞ்சுக்கொடியை புதைப்பார்கள். மனிதர்களுக்கும் பூமிக்கும் இடையே உள்ள உறவை வலியுறுத்துவதற்காக பிறந்தகுழந்தையுடன் வெளிவரும் நஞ்சுக்கொடியை வழக்கமாக நியூசிலாந்தின் மவுரி மக்கள் புதைப்பார்கள்.[12] அதே போல,ஒரு குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் நஞ்சுக்கொடியையும் தொப்புட்கொடியையும் நவஹோ மக்கள் அடக்கம் செய்துவிடுவார்கள்.[13] இது குறிப்பாக குழந்தை பிறக்கும் போது இறந்துவிட்டால் செய்யப்படுகிறது.[14] கம்போடியா மற்றும் கோஸ்டா ரிக்காவில், தாய் மற்றும் குழந்தையின் நலத்தை உறுதி செய்வதற்காக நஞ்சுக்கொடி புதைக்கப்படுகின்றது என்று நம்பப்படுகிறது.[15] பொலிவியாவின் ஆய்மாராவில், குழந்தை பிறப்பின் போது குழந்தையின் தாய் இறந்துவிட்டால், அந்த தாயின் ஆவி தன்னுடைய குழந்தையின் உயிரைக் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக, அந்த நஞ்சுக்கொடியை ஒரு இரகசிய இடத்தில் புதைத்துவிடுவர்.[16]
குழந்தை அல்லது அதனுடைய பெற்றோர்களின் உயிரின் மேல் நஞ்சுக்கொடிக்கு சக்தி இருக்கிறது என்று சில சமுதாயங்களில் நம்பபடுகின்றது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் குவாக்கியூட்டிலில், பெண்களுக்கு மட்டிகள் தோண்டும் திறமையை கொடுப்பதற்காக பெண்குழந்தையின் நஞ்சுக்கொடிகளை புதைத்துவிடுவார்கள். எதிர்கால தீர்க்கதரிசனம் சார்ந்த வெளிப்படுத்தல்களை ஊக்கப்படுத்துவதற்காக ஆண் குழந்தைகளின் நஞ்சுக்கொடிகளை அண்டங்காக்கைகளுக்கு வெளிக்காட்டிவிடுவார்கள். துருக்கியில், நஞ்சுக்கொடி மற்றும் தொப்புட்கொடியை சரியான முறையில் அடக்கம் செய்வதனால், குழந்தையின் பிற்கால வாழ்க்கையின் தெய்வப்பக்தி அதிகமாகிறது என்று நம்பப்படுகிறது. உக்ரேன், டரன்சில்வானியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் அகற்றப்பட்ட நஞ்சுக்கொடியுடன் பேச்சு வைத்துக்கொள்வதனால், பெற்றோர்களின் எதிர்கால குழந்தைப்பிறப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
பல கலாச்சாரங்களில், நஞ்சுக்கொடி உயிர் பெறுவதாகவோ அல்லது உயிரோடு இருப்பதாகவோ, பெரும்பாலும் குழந்தையின் ஒரு உறவாகவும் நம்பப்படுகிறது. நேபாளிகள், நஞ்சுக்கொடி குழந்தையின் ஒரு தோழன் என்று நினைக்கிறார்கள்; மலேசிய ஓரங் ஆஸ்லி மக்கள், நஞ்சுக்கொடி குழந்தையின் மூத்த உடன்பிறப்பு என்று நம்புகிறார்கள். நைஜீரியாவின் ஐபோவில், குழந்தையோடு ஒட்டிபிறக்கும் மற்றொரு நோயுற்ற உடன்பிறப்பு என்று நஞ்சுக்கொடியை கருதுகிறார்கள். இதன் காரணத்தினால், அதற்கு முழு அடக்க சடங்குகளையும் அவர்கள் நடத்துவார்கள்.[15] ஹவாய் நாட்டை சேர்ந்தவர்கள், நஞ்சுக்கொடியை குழந்தையின் ஒரு அங்கமாக கருதுகிறார்கள். இதனால் வழக்கமாக ஒரு மரத்துடன் சேர்ந்து அதை நடுவார்கள். அது பிற்பாடு குழந்தையோடு கூட வளரும் என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது.[11]
சில கலாச்சாரங்களில், நஞ்சுக்கொடி உணவாக உண்ணப்படுகிறது. இந்த வழக்கத்தை ப்ளெசெண்டாஃபாகி என்று அழைக்கின்றனர். சீனா மற்றும் ஹாங்காங் போன்ற சில கிழக்கத்திய கலாச்சாரங்களில், நஞ்சுக்கொடி, ஒரு சுகாதாரம் நிறைந்த ஒன்றாக கருதப்படுகிறது. இதன் காரணத்தினால், நஞ்சுக்கொடி, மருந்துகள் மற்றும் பல்வேறு உடல்நல பொருட்கள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.[17]
மேற்கத்திய கலாச்சாரத்தில், மனிதர்கள் அல்லது மற்ற மனிதர்களின் பாகங்களை உண்ணுதல் ஆன்திரோபோஃபாகியாக கருதப்படுகிறது. இது ஒரு சட்ட விரோத குற்றமாகவும் எண்ணப்படலாம். எனினும், ப்ளெசெண்டோஃபாகியினால் பலன்கள் அதிகமாக உள்ளன என்று சமீபத்திய ஆய்வுகள் கண்பித்துள்ளன. இந்த பழக்கம் நாடு முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. [18]
கூடுதல் படங்கள்
- சுமார் 8 வாரங்கள் வளர்ந்துள்ள முதிர்மூலவுரு, பனிக்குடத்தினால் மூடப்பட்டுள்ளது.இது சுமார் இரண்டு விட்டங்கள் உருப்பெருக்கம் செய்யப்பட்டுள்ளது.
- புதிதாக வெளியெடுக்கப்பட்ட நஞ்சுக்கொடி மற்றும் தொப்புட்கொடி கெல்லி கவ்வியில் சுற்றப்பட்டுள்ள படம்
- புதிதாக வெளிவந்த மனித நஞ்சுக்கொடி
- நஞ்சுக்கொடி சார்ந்த நோய்த்தொற்றின் நுண்படம் (சி.எம்.வி ப்ளெசெண்டைட்டிஸ்).
- CMV ப்ளெசெண்டைட்டிஸின் நுண்படம்.
மேலும் காண்க
- மூலவுரு
- குழந்தை பிறப்பு
- கருப்பை
குறிப்புகள்
- போ மற்றும் மற்றவர்கள் 1992. ஹெர்படாலஜி: மூன்றாவது பதிப்பு. பியர்சன் பிரிண்டிஸ் ஹால்: பியர்சன் எடுகேஷன், இங்க்., 2002.
- ஹென்றி ஜார்ஜ் லிட்டல், ராபர்ட் ஸ்காட், "அ க்ரீக்-இங்கிலிஷ் லெக்சிகன்", அட் பெர்சியஸ்
- நஞ்சுக்கொடியின் மருத்துவ பரிசோதனை
- http://www.vivo.colostate.edu/hbooks/pathphys/reprod/placenta/structure.html நஞ்சுக்கொடி சார்ந்த கட்டமைப்பு மற்றும் வகைப்பாடு
- நஞ்சுக்கொடி சார்ந்த இரத்த ஓட்டம்
- "Placenta 'fools body's defences'". BBC News (10 November 2007).
- Clark DA, Chaput A, Tutton D (March 1986). "Active suppression of host-vs-graft reaction in pregnant mice. VII. Spontaneous abortion of allogeneic CBA/J x DBA/2 fetuses in the uterus of CBA/J mice correlates with deficient non-T suppressor cell activity". J. Immunol. 136 (5): 1668–75. பப்மெட்:2936806. http://www.jimmunol.org/cgi/pmidlookup?view=long&pmid=2936806.
- Williams Z, Zepf D, Longtine J, et al. (March 2008). "Foreign fetal cells persist in the maternal circulation". Fertil. Steril.. doi:10.1016/j.fertnstert.2008.02.008. பப்மெட்:18384774.
- http://www.sarahjbuckley.com/articles/leaving-well-alone.htm
- http://www.amazon.com/Placental-Pharmacology-Toxicology-Rama-Sastry/dp/0849378117
- "Why eat a placenta?". BBC. 18 April 2006. http://news.bbc.co.uk/1/hi/magazine/4918290.stm. பார்த்த நாள்: 8 January 2008.
- மெட்கே, ஜோன். 2005 "வர்கிங் இன்/ப்ளேயிங் வித் த்ரீ லாங்குவேஜஸ்: இங்கிலிஷ், டெ ரோ மவுரி, அண்டு மவுரி பாட் லாங்குவேஜ்." சைட்ஸ் N.S தொகுப்பில். 2, எண் 2:83-90.
- Francisco, Edna (3 December 2004). "Bridging the Cultural Divide in Medicine". Minority Scientists Network. பார்த்த நாள் 7 January 2008.
- Shepardson, Mary (1978). "Changes in Navajo Mortuary Practices and Beliefs". American Indian Quarterly. University of Nebraska Press. பார்த்த நாள் 7 January 2008.
- Buckley, Sarah J.. "Placenta Rituals and Folklore from around the World". Mothering. பார்த்த நாள் 7 January 2008.
- Davenport, Ann (June 2005). "The Love Offer". Johns Hopkins Magazine. பார்த்த நாள் 7 January 2008.
- Falcao, Ronnie. "Medicinal Uses of the Placenta". பார்த்த நாள் 25 November 2008.
- http://placentabenefits.info/