சின்னக்குத்தூசி

சின்னக்குத்தூசி என்று பரவலாக அறியப்பட்ட இரா. தியாகராஜன் (ஜூன் 15, 1934 - மே 22, 2011) தமிழ்நாட்டின் சிறந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர். இவர் திருவாரூரில் 1934 ல் பிறந்தார்[1]. திருவாரூரில் பள்ளிப்படிப்பை முடித்து பின்னர் பெரியார் நடத்திய ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் ஆசிரியராக பயிற்சி எடுத்தார்.

திமுக தலைவர் மு. கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். பல்வேறு இதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் அரசியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் மே 22, 2011 ல் சென்னையில் காலமானார். எழுத்துப்பணி, பொதுவாழ்க்கைக்காக திருமணம் செய்யவில்லை. 2010 முதல் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் உயர்சிகிச்சை பெற்று வந்தார். தன் உடல்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து கட்டுரைகள் பல எழுதி வந்தார். சின்னக்குத்தூசியை 15 ஆண்டுகளாக நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் கோபால் கவனித்து வந்தார். சின்னக்குத்தூசியின் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது அவர்தான் மருத்துவமனையில் சேர்த்து முழு சிகிச்சைகளையும் கவனித்தார்.[2].

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. http://dinamani.com/edition/story.aspx?artid=421293
  2. http://thatstamil.oneindia.in/news/2011/05/22/journalist-chinna-kuthoosi-dead-aid0091.html


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.