கோவூர் கிழார் (பாட்டியல்)

கோவூர் கிழார் எனும் பெயர் கொண்ட பல புலவர்கள் உள்ளனர். அவர்களுள் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தக் கோவூர் கிழார் பாட்டியல் நூல் செய்த இலக்கணப் புலவர்.

பன்னிரு பாட்டியல் என்னும் நூலில் இவரது 53 பாடல்கள் அடைவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் 52 பாடல்கள் சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் கூறும் இனவியல் பகுதியில் உள்ளன.

புகழ்ச்சிமாலை, இன்னிசைத்தொகை, பதிகம், மெய்க்கீர்த்தி ஆகியவற்றுக்கான இலக்கண விளக்க நூற்பாக்கள் இவரது பெயரில் உள்ளன.

கருவிநூல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.