கெலந்தானின் ஐந்தாம் முகம்மது

சுல்தான் ஐந்தாம் முகம்மது (Sultan Muhammad V; பிறப்பு: 6 அக்டோபர் 1969) மலேசியாவின் 15 வதும், தற்போதைய மாட்சிமை தங்கிய பேரரசரும் (நாட்டுத் தலைவர்) கெலந்தான் மாநிலத்தின் அரசரும் (சுல்தான்) ஆவார். இவரது தந்தை சுல்தான் இசுமாயில் பெத்ரா சுகவீனமுற்றதை அடுத்து ஐந்தாம் முகம்மது கெலந்தானின் சுல்தானாக 2010 செப்டம்பர் 13 இலும்,[2] மலேசியாவின் பேரரசராக 2016 டிசம்பர் 13 இலும் ஆட்சியில் அமர்ந்தார். 2 நவம்பர் 2018 முதல் இரண்டு மாதத்திற்கு இவர் அரசர் பனியின் விடுப்பிலிருந்தார். அந்த கால கட்டத்தில் 22 நவம்பர் 2018 -ல் முன்னாள் மொஸ்கோ அழகியான ஆக்சனா வோஎவோடின-வை ருசியா நாட்டில் மணமுடித்ததாக பரவலாக பேசப்பட்டது. இருந்த பொழுதும் இவர் பேரரசர் அரியணையை விட்டு விலகும் வரை அரண்மையிலிருந்து இந்த திருமணத்தை பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

ஐந்தாம் முகம்மது
யாங் டி-பெத்துவான் அகொங்கு XV
கெலந்தானின் சுல்தான்

யாங் டி பெர்துவான் அகோங்
ஆட்சிக்காலம் 13 டிசம்பர் 2016 – இன்று
மலேசியா 24 ஏப்ரல் 2017
முன்னையவர் அப்துல் ஆலிம்
பிரதமர்கள்
கெலந்தான் சுல்தான்
ஆட்சிக்காலம் 13 செப்டம்பர் 2010 – இன்று
முன்னையவர் இசுமாயில் பெத்ரா
வாரிசுகள் பாயிசு பெத்ரா
முதலமைச்சர்கள்
வாழ்க்கைத் துணை தெங்கு சுபைதா பிந்தி தெங்கு நூருதீன் (மணமுறிவு)[1]
முழுப்பெயர்
தெங்கு முகம்மது பாரிசு பெத்ரா இப்னி தெங்கு இசுமாயில் பெத்ரா
குடும்பம் லோங் செனிக் மாளிகை
தந்தை கெலந்தானின் இசுமாயில் பெத்ரா
தாய் தெங்கு ஆனிசு பிந்தி தெங்கு அப்துல் அமீது
பிறப்பு 6 அக்டோபர் 1969 (1969-10-06)
இசுத்தானா பத்து, கொட்டா பாரு, கிளாந்தான், மலேசியா
சமயம் சுன்னி இசுலாம்

கெலந்தான் மாநிலத்தின் அரசர்

தெங்கு முகம்மது இபாரிஸ் பெட்ரா இப்பிணி தெங்கு இஸ்மாயில் பெட்ரா 13ஆம் திகதி செப்டம்பர் 2010யில் [2] கெலந்தான் ஆட்சியாளராக பதிவி பிரமாண்டம் எதுத்துக்கொண்டார். மாநில அதிகாரப்பூர்வ அமைப்பின் கீழ், பிரிவு 29A வின் கீழ், நடப்பில் இருந்த தந்தையின் உடல்நலம் கருதி இவர் ஆட்சிக்கு வந்தார்.[3]

துணை யாங் டிபேர்துஹான் அகோங்

சுல்தான் முஹமட் 5 அக்டோபர் 2011 மாதம் துணை யாங் டிபேர்துஹான் அகோங் நியமிக்கப்படடர். இப்பதவியை இவர் 13 டிசம்பர் 2011 முதல் 13 டிசம்பர் 2016 வரை வகித்துவந்தார்.[4]

யாங் டிபேர்துஹான் அகோங்

14 ஆக்டொபர் 2016யில் நடைபெற்ற அரசவை மாநாட்டில், சுல்தான் முஹமட் 5 அடுத்த யாங் டிபேர்துஹான் அகோங்-ஆக அறிவிக்கப்படடர். இவரது ஆட்சிக்காலம் 13 டிசம்பர் 2016 தொடங்கியது. 

இவர் எவரும் எதிர்பார்க்காத நிலையில் 6-ம் ஜனவரி 2019 அரசர் பதவியை துறந்தார். மலேசிய வரலாற்றில் பேரரரசர் பதிவி துறப்பது இதுவே முதல் முறை.[5]

மேற்கோள்கள்

  1. "King of people’s hearts - Nation - The Star Online". பார்த்த நாள் 13-03-2018.
  2. Soszynski, Henry. "KELANTAN". பார்த்த நாள் 13 March 2018.
  3. "Tuanku Muhammad Faris Petra is new Sultan of Kelantan". Sin Chew Daily. 13 September 2010. http://www.mysinchew.com/node/44820. பார்த்த நாள்: 22 September 2010.
  4. "Pejabat Penyimpan Mohor Besar Raja-Raja – Senarai Timbalan Yang di-Pertuan Agong".
  5. "Sadness, shock over Sultan Muhammad V's resignation as King". thestar.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.