குயுக் கான்
குயுக் (அல்லது குயுக்; மொங்கோலியம்: Гүюг хаан,[1] güyüg qaγan) (c. மார்ச் 19, 1206 – ஏப்ரல் 20, 1248) மங்கோலியப் பேரரசின் மூன்றாவது பெரிய கான், ஒகோடி கானின் மூத்த மகனும் செங்கிஸ் கானின் பேரனும் ஆவார். இவர் 1246 முதல் 1248 வரை ஆட்சி செய்தார்.
குயுக் கான் Гүюг хаан ᠭᠦᠶᠦᠭ ᠬᠠᠭᠠᠨ | |
---|---|
மங்கோலியப் பேரரசின் 3வது ககான் (மங்கோலியர்களின் உயர்வான கான்) மன்னர்களின் மன்னர் | |
![]() | |
ஆட்சிக்காலம் | 24 ஆகஸ்ட் 1246 – 20 ஏப்ரல் 1248 |
முடிசூடல் | 24 ஆகஸ்ட் 1246 |
முன்னையவர் | ஒகோடி கான் |
பின்னையவர் | மோங்கே கான் |
வாழ்க்கைத் துணை | ஒகுல் கைமிஸ் |
மறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர் | |
பேரரசர் ஜியான்பிங் (簡平皇帝, இறப்பிற்குப் பின் 1266ல் கொடுக்கப்பட்டது) | |
கோயிலில் சூட்டப்பட்ட பெயர் | |
டிங்சோங் (定宗, இறப்பிற்குப் பின் 1266ல் கொடுக்கப்பட்டது) | |
குடும்பம் | போர்சிசின் |
தந்தை | ஒகோடி கான் |
தாய் | தோரேசின் கதுன் |
பிறப்பு | 19 மார்ச் 1206 |
இறப்பு | 20 ஏப்ரல் 1248 (அகவை 42) கும்-செங்கிர், சிஞ்சியாங் |
சமயம் | பௌத்த மதம் |
ஆரம்ப வாழ்க்கை
குயுக்குக்கு இராணுவ பயிற்சி செங்கிஸ் கான் மற்றும் ஒகோடி கான் ஆகியோரின் கீழ் ஒரு அதிகாரியாக கிடைத்தது. இவர் மெர்கிட் வம்சத்தின் ஓகுல் கைமிசை மணந்தார். 1233 ஆம் ஆண்டில், குயுக், அவரது தாயாரின் உறவினரான அல்சிடை மற்றும் மங்கோலியத் தளபதி டாங்குடு ஆகியோருடன் சேர்ந்து, எதிர்ப்பாளரான ஜின் அதிகாரி புக்சியன் வன்னுவின் டோங்சியா அரசை சில மாதங்களில் வெற்றிகொண்டனர்.[2] டொலுய் இறந்த பிறகு, ஒகோடி டொலுயின் விதவையான சோர்க்காக்டனியை, அவரது மகன் குயுக்கை மணம்புரியுமாறு முன்மொழிந்தார். சோர்க்காக்டனி தனக்குத் தன் மகன்களே பிரதானமானவர்கள் என்று மறுத்துவிட்டார்.[3]

மேற்கோள்கள்
- "Гүюг хаан" (mn).
- Pál Nyíri-Chinese in Eastern Europe and Russia, p.4
- John Man-Kublai Khan, p.19