கு. மா. பாலசுப்பிரமணியம்

கு. மா. பாலசுப்பிரமணியம் (மே 13, 1920 - நவம்பர் 4, 1994) திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 'கு.மா.பா' என்று திரையிசை ரசிகர்களால் அழைக்கப்பட்டவர்.[1]

கு. மா. பாலசுப்பிரமணியம்
பிறப்புகுறிச்சி மாரிமுத்து பாலசுப்பிரமணியம்
மே 13, 1920(1920-05-13)
வேளுக்குடி
மன்னார்குடி
திருவாரூர் மாவட்டம்
தமிழ் நாடு
இறப்புநவம்பர் 4, 1994(1994-11-04) (அகவை 74)
பணிகவிஞர், எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
மரகதவல்லி,
ஜெயலட்சுமி
பிள்ளைகள்கு. மா. பா. இளங்கோவன்
கு. மா. பா. திருநாவுக்கரசு
கு. மா. பா. கபிலன்
மங்கையர்க்கரசி கலியமூர்த்தி
அங்கயற்கண்ணி கிருஷ்ணகுமார்
(அமரர்) கு. மா. பா. புகழேந்தி
(அமரர்) கு. மா. பா. காளமேகம்

வாழ்க்கைச் சுருக்கம்

1920 இல் திருவாரூர் அருகேயுள்ள வேளூக்குடியில் பிறந்தார். நான்கு வயதில் தந்தையை இழந்தார். இவரது தாயார் தேவாரம், திருவாசகம், பக்திப் பனுவல்களை இசைக்கக்கூடியவராக இருந்தார். தாயைப் போல பிள்ளை என்பதற்கேற்ப தாய் பாடிய பாடல்கள்தான் தனது தமிழார்வத்தையும், இசை வேட்கையையும் தூண்டியதாக கு.மா.பா பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். ஜெயலக்ஷ்மித் 1947 ல் திருமணம் செய்து, ஐந்து ஆண் மக்களையும், இரண்டு பெண் மக்களையும் பெற்றார். இவரது இளைய மகன் கு. மா. பா. கபிலன் ஆவார்.

சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் அரசியல் பணியாற்றியவர். அக்கழகத்தின் பொதுச்செயலாலராகவும் கடமையாற்றியுள்ளார். 1974 முதல் 1980 வரை தமிழக சட்டசபை மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். பாரதிதாசன் மீது தீவிர அபிமானம் கொண்டிருந்தவர்.

எழுதிய சில திரைப்படப் பாடல்கள்

  • யாரடீ நீ மோகினி (உத்தம புத்திரன், 1958)
  • சின்னையா என்றழைத்த (தங்கமலை ரகசியம் படத்துக்காக நேரிசை வெண்பாவாக இயற்றினார்)
  • சித்திரம் பேசுதடி
  • அன்பே என் ஆராவமுதே வாராய்
  • குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே (மரகதம் படத்தில் இடம்பெற்று நடிகர் சந்திரபாபுவின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்ற பாடல்)
  • அமுதைப் பொழியும் நிலவே (தங்கமலை ரகசியம்)
  • மாசிலா நிலவே நம் காதலை (அம்பிகாபதி)
  • நெஞ்சினிலே நினைவு முகம் (சித்ராங்கி)
  • சிரிக்கத் தெரியுமா (குழந்தைகள் கண்ட குடியரசு, 1960)
  • வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் இயற்றினார்.

மேற்கோள்களும் உசாத்துணைகளும்

  • கவிஞர் கு.மா. பாலசுப்பிரமணியம் திரை இசைப் பாடல்கள். மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600 108. 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.