காதல் மன்னன் (திரைப்படம்)

காதல் மன்னன் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அஜித் குமார், மானு, விவேக், ம. சு. விசுவநாதன், கரன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்குனர் சரண் இயக்கியிருந்தார். இசையமைப்பாளர் பரத்வாஜின் இசையமைப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 1998-ம் ஆண்டு வெளிவந்து திரையில் வெற்றிகரமாக ஓடியது.

காதல் மன்னன்
இயக்கம்சரண்
தயாரிப்புசுதிர் குமார்
கதைசரண்
இசைபரத்வாஜ்
நடிப்புஅஜித் குமார்
மானு
ம. சு. விசுவநாதன்
விவேக்
கரன்
கிரிஷ் கர்னாட்
ஒளிப்பதிவுடி. விஜயகுமார்
படத்தொகுப்புகணேஷ் குமார்
வெளியீடுமார்ச் 6, 1998
ஓட்டம்136 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

ருத்ரா (கிரிஷ் கர்னாட்), தனது இரண்டு மகள்களையும் மிகவும் கண்டிப்புடன் வளர்த்து வருகிறார். அவரது மூத்த மகள் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஒடிவிடவே, அவரது இரண்டாவது மகளான திலோத்தமா (மானு) மீது கண்டிப்பு இரட்டிப்பாகிறது. இந்நிலையில் ருத்ரா தனது நண்பனின் மகனான (கரண்) திலோத்தமாவை திருமணம் செய்ய நிச்சயம் செய்கிறார். நிச்சயம் செய்த பின்னர் சிவா (அஜித் குமார்) மீது திலோத்தமாவுக்கு காதல் வருகிறது. காதல் என்ற வார்த்தையையே பிடிக்காத தன் தந்தையிடம் தனது காதலை பற்றி சொல்ல முடியாமல் தவிக்கிறார். காதலர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்தாலும் அதை மற்றவரிடம் சொல்லாமல் தவிக்கிறார்கள். காதலர்கள் ஒருவருக்கொருவர் காதலை சொன்னார்களா, திலோத்தமாவின் தந்தை தனது மகளின் காதலை ஏற்றுக் கொண்டாரா, என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும்.

நடிகர்கள்

தயாரிப்பு

"ஒருவருடன் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிர்பாராதவிதமாக வேறு ஒரு நபரின் மீது காதல் வந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதை" என்கிறார் இயக்குநர் சரண். தமிழ் திரைப்படத் துறையில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ம. சு. விசுவநாதன் இந்த திரைப்படத்தில் தான் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார். அவருடன் அசாம் நடிகை மானு மற்றும் இசையமைப்பாளர் பரத்வாஜும் இந்த திரைப்படத்தில் தான் அறிமுகமானார்கள்.[1] படம் வெளியாவதற்கு முன்பாகவே இதன் பாடல்கள் அனைவராலும் விரும்பி கேட்கக்கூடிய பாடல்களாக அமைந்தன.[2] இத்திரைப்படத்தில் நடிக்க ம. சு. விசுவநாதன் முதலில் மறுத்து விட்டார். ஆனால் நடிகர் விவேக் மறுபடியும் வற்புறுத்தி அவரை இத்திரைப்படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்தார்.[3]

பாடல்கள்

பரத்வாஜ் இசையமைத்த முதல் திரைப்படமான இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து, மற்றும் கவிஞர் வாலி ஆகியோர் எழுதியுள்ளனர்

எண்பாடல்பாடலாசிரியர்பாடியவர்(கள்)
1உன்னைப் பார்த்தவைரமுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம்
2வானும் மண்ணும்ஹரிஹரன், சித்ரா
3திலோத்தமாபரத்வாஜ், அனுபமா
4மெட்டுத் தேடிவாலிம. சு. விசுவநாதன்
5மாரிமுத்து மாரிமுத்துவைரமுத்துதேவா
6கன்னிப் பெண்கள்ஃபெபி, அதா அலி அஸாத்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.