கலித்தளை
கலித்தளை என்பது பண்டைய தமிழ்ப் பாடல்களில் ஒன்றான கலிப்பாவில் மிகுதியாகப் பயின்றுவரும் தளை. இது வெண்டளை, ஆசிரியத்தளை, கலித்தளை, வஞ்சித்தளை என்னும் நான்கு வகைத் தளைகளில் ஒன்று. கலித்தளையானது அருவிநீர் கலிப்பது [1] போல ஓசை துள்ளி நடக்கும். [2]
எடுத்துக்காட்டு
- ஏந்திசைத் துள்ளல்
முருகவிழ்தா | மரைமலர்மேன் | முடியிமையோர் | புடைவரவே |
வருசினனார் | தருமறைநூல் | வழிபிழையா | மனமுடையார் |
இருவினைபோய் | விழமுனியா | வெதிரியகா | தியையரியா |
நிருமலரா | யறிவினராய் | நிலவுவர்சோ | தியினிடையே.'[3] [4] |
- இந்தப் பாடலில் 'கருவிளங்காய்' என்னும் வாய்பாட்டில் முடியும் வாய்பாட்டுக் காய்ச்சீர் முன் 'நிரை' வந்து தளைந்து நிற்பதால் துள்ளும் ஓசை பெற்றுக் கலித்தளை ஆயிற்று.
- அடியோடு அடி தளையும்போதும் கலித்தளை [5]
- அகவல் துள்ளல்
செல்வப்போர்க் | கதக்கண்ணன் | செயிர்த்தெறிந்த | சினவாழி |
முல்லைத்தார் | முடிமன்னர் | முடித்தலையை | முருக்கிப்போய் |
எல்லைநீர் | இயன்கொண்மூ | இடைநுழையும் | மதியம்போல் |
மல்லலோங் | கெழில்யானை | மருமம்பாய்ந் | தொளித்த்தே [6] [7] |
- இது வெண்சீர் வெண்டளையும், கலித்தளையும் விரவி வந்தமையான் அகவல் துள்ளலோசை
- அடியோடு அடி புணரும்போது வெண்சீர் வெண்டளை [8]
அடிக்குறிப்பு
- துள்ளிப் குதிப்பது
- 'துள்ளல் ஓசை கலி' என மொழிப (தொல்காப்பியம் 2-388)
-
- முருகு அவிழ் தாமரை மலர் மேல் முடி இமையோர் புடை வரவே
- வரு சினனார் தரு மறைநூல் வழி பிழையா மனமுடையார்
- இருவினை போய் விழ முனியா எதிரிய காதியை அரியா
- நிருமலராய் அறிவினராய் நிலவுவர் சோதியினிடையே.'
- யாப்பருங்கலக் காரிகை 22 உரை மேற்கோள்
- புடைவரவே வருசினத்தார் - கருவிளங்காய் முன் நிரை
-
- செல்வப் போர்க் கதக் கண்ணன் செயிர்த்து எறிந்த சின ஆழி
- முல்லைத் தார் முடி மன்னர் முடித் தலையை முருக்கிப் போய்
- எல்லை நீர் இயல் கொண்மூ இடை நுழையும் மதியம் போல்
- மல்லல் ஓங்கு எழில் யானை மருமம் பாய்ந்து ஒளித்த்தே
- யாப்பருங்கலக் காரிகை 11 உரை மேற்கோள்
- சினவாழி முல்லைத்தார - புளிமாங்காய் முன் நேர்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.