கர்னூல்
கர்னூல் (ஆங்கிலம்:Kurnool), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள கர்னூல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இது ஆந்திராவின் மேற்குமத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இது துங்கபத்ரா ஆறு மற்றும் ஹந்திரி ஆறுகளின் தென்கரையில் அமைந்துள்ளது. 1953 முதல் 1956 வரை கர்னூலே ஆந்திராவின் தலைநகரமாக இருந்தது.
கர்னூல் | |
அமைவிடம் | 15°50′N 78°03′E |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | கர்னூல் |
ஆளுநர் | ஈ. சீ. இ. நரசிம்மன்[1] |
முதலமைச்சர் | நா. சந்திரபாபு நாயுடு[2] |
மக்கள் தொகை | 267 (2001) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 274 மீட்டர்கள் (899 ft) |
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 15.83°N 78.05°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 274 மீட்டர் (898 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 267,739 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குர்நூல் மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குர்நூல் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
- http://india.gov.in/govt/governor.php
- http://india.gov.in/govt/chiefminister.php
- "Kurnool". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
- "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.