கருவூலம்

கருவூலம் (ஆங்கிலம்: Treasury) என்னும் சொல் அரசு-நிதியைப் பாதுகாத்து வழங்கும் இடம் ஆகும். இக்காலத்தில் இது அரசு நாணயங்களைப் பேணும் இடமாகத் திகழ்கிறது. இவை தலைமைக் கருவூலம், கிளைக்கருவூலம் என்னும் அமைப்புகளில் இயங்கிவருகின்றன.

சங்ககாலக் கருவூலங்கள்

தமிழ்நாட்டில் சங்ககாலத்தில் இருந்த கருவூலங்கள் பற்றிய செய்திகளைச் சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன.

அடிக்குறிப்பு

  1. சேரலாதன் கடம்பு அறுத்து, இமயத்து வில் பொறித்து, மரந்தை முற்றத்து ஒன்னார் பணிந்து திறை தந்த … நன்கலம் பொன் செய் பாவை வயிரமொடு நிலம் தினத் துறந்த நிதியம் – அகநானூறு 127, நிலம் தினத் துறந்த நிதியம் – மலைபடுகடாம் 575
  2. கொற்றச் சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதியம் - அகம் 60
  3. காவிரிப் படப்பைப் பட்டினத்து அன்ன செழுநகர் நல்விருந்து அயர்மார் ஏமுற விழுநிதி - அகநானூறு 205
  4. ஊணூர் உம்பர் விழுநிதி துஞ்சும் … மருங்கூர்ப்பட்டினம் – அகநானூறு 227
  5. வயவர் தந்த வான்கேழ் நிதியம் … பாண்டிலில் ஏற்றித் தருவான் – சிறுபாணாற்றுப்படை 249
  6. நந்தர் சீர்மிகு பாடலி குழீஇ கங்கை நீர்முதல் கரந்த நிதியம் – அகம் 265
  7. நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பு – அகநானூறு 378, செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன் ஊர் – மலைபடுகடாம் 478
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.