கயல்விழி (புதினம்)

கயல்விழி அகிலன் எழுதிய வரலாற்றுப் புதினமாகும். இது மூன்று பாகங்களைக் கொண்ட ஒரே தொகுப்பாக அமைந்துள்ள நூலாகும். 13ஆம் நூற்றாண்டில் சோழர்களின் மேலாட்சியை எதிர்த்து, பாண்டிய அரசை நிறுவிய சுந்தரபாண்டியன் பற்றிய புதினமாகும்.

கயல்விழி
நூல் பெயர்:கயல்விழி
ஆசிரியர்(கள்):அகிலன்
வகை:புதினம்
துறை:வரலாறு
இடம்:சென்னை 600 0017
மொழி:தமிழ்
பக்கங்கள்:608
பதிப்பகர்:தாகம்
பதிப்பு:17ஆம் பதிப்பு 2012

இந்தப் புதினம், கல்கியில் 1964ல் தொடங்கி 1965வரை வெளியானது. [1]

அமைப்பு

  • முதல் பாகம் (மதுரைத் திருமகன்) - 32 அத்தியாயங்கள்
  • இரண்டாம் பாகம் (வெற்றித் திருமகள்)- 38 அத்தியாயங்கள்
  • மூன்றாம் பாகம் (இவனே தலைவன்)- 28 அத்தியாயங்கள்

கதை மாந்தர்

சுந்தரபாண்டியன், கயல்விழி, காரனை விழுப்பரையர் ஆகியோர் இக்கதையில் முக்கிய மாந்தராவர்.

உசாத்துணை

  • 'கயல்விழி', நூல், (17ஆம் பதிப்பு 2012; தாகம், பு.எண் 34, ப.எண் 35, சாரங்கபாணித் தெரு, தி.நகர், சென்னை)

மேற்கோள்கள்

  1. www.neerottam.com

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.