ஓர்ச்சா

ஓர்ச்சா (Orchha or Urchha) இந்தியாவின் மத்தியப் பிரதே மாநிலத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் திகம்கர் மாவட்டத்தில் அமைந்த வரலாற்று சிறப்பு மிக்க நகரமாகும். ஓர்ச்சா நகரத்தை சந்தேல இராஜபுத்திர மன்னர் ருத்திரபிரதாப சிங் என்பவரால் 1531-இல் நிறுவப்பட்டது.

ஓர்ச்சா
ओरछा
நகரம்
ஓர்ச்சா அரண்மனை
நாடுஇந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்திகம்கர்
ஏற்றம்552
மக்கள்தொகை (2001)
  மொத்தம்8,501
மொழிகள்
  அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீடு எண்07680
வாகனப் பதிவுMP-36
இணையதளம்www.ramrajatempleorchha.com

பேட்வா ஆற்றாங்கரையில் அமைந்த கோட்டையுடன் கூடிய ஓர்ச்சா நகரம், ஜான்சியிலிருந்து 15 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.[1]

இந்திய விடுதலை அடையும் வரை, பிரித்தானிய இந்திய அரசில் ஓர்ச்சா ஒரு சுதேச சமஸ்தானமாக விளங்கியது.

ஓர்ச்சா நகரத்தின் கோட்டை வளாகத்தை[2] தற்காலிக உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக சேர்க்க இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யுனெஸ்கோவை அணுகியுள்ளனர். [3]

மக்கள் தொகையியல்

2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஓர்ச்சா நகரத்தின் மக்கள் தொகை 8,501 ஆகும்[4] அதில் ஆண்கள் 53% ஆகவும்; பெண்கள் 47% ஆகவும் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 54% ஆகும். ஆறு வயதிற்குட்பட்ட குழுந்தைகள் 18% ஆகும்.

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

  1. "Orchha". Tikamgarh district website.
  2. Orchha Fort complex
  3. MP's Orchha makes it to tentative list of UNESCO World Heritage Sites
  4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.

வெளி இணைப்பு

Pictures
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.