ஈபெல் கோபுரம்

ஈபெல் கோபுரம் (பிரெஞ்சு: Tour Eiffel, /tuʀ ɛfɛl/) பாரிஸில் மிகக் கூடுதலாக அடையாளம் காணத்தக்க குறிப்பிடமாகும். அத்துடன், உலகம் முழுவதிலும், இது பாரிஸிற்கான ஒரு குறியீடாகவும் அறியப்படுகிறது. இதை வடிவமைத்த அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் ல்லின் பெயரினால் அழைக்கப்படும் இக் கோபுரம், முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஆண்டுதோறும் 55 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதைப் பார்க்க வருகிறார்கள். இக் கோபுரம் தனது 20 கோடியாவது பார்வையாளரை 2002, நவம்பர் 28 ஆம் திகதி பெற்றது.

ஈபெல் கோபுரம்
Eiffel Tower
La Tour Eiffel
சாம்ப் டி மார்சு (Champ de Mars) என்ற இடத்திலிருந்து ஈபெல் கோபுரத்தின் தோற்றம்
Location within Paris
Record height
Tallest in the world from 1889 to 1930[I]
பொதுவான தகவல்கள்
வகைஅவதானிப்புக் கோபுரம்,
வானொலி ஒலிபரப்புக் கோபுரம்
இடம்பாரிசு, பிரான்சு
ஆள்கூற்று48°51′29.6″N 2°17′40.2″E
கட்டுமான ஆரம்பம்1887
நிறைவுற்றது1889
ஆரம்பம்31 மார்ச் 1889
உரிமையாளர்பாரிசு நகரம், பிரான்சு
ManagementSociété d'Exploitation de la Tour Eiffel (SETE)
உயரம்
Antenna spire324.00 m (1,063 ft)
கூரை300.65 m (986 ft)
உச்சித் தளம்273.00 m (896 ft)
நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை3
உயர்த்திகள்9
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்ஸ்டீவன் சவஸ்ட்ரி
அமைப்புப் பொறியாளர்மொரிசு கொச்லின்,
ஏமிலி நோகியே
முதன்மை ஒப்பந்தகாரர்அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்

அறிமுகம்

1887 தொடக்கம் 1889 வரையான காலப்பகுதியில், இவ்வமைப்பு, பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, எக்ஸ்பொசிசன் யூனிவேசெல் (1889) என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு, நுழைவாயில் வளைவாகக் கட்டப்பட்டது. 1889, மார்ச் 31 ஆம் திகதி தொடக்கவிழா நடைபெற்று, மே 6 இல் திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள், 5 இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி, 18,038 உருக்குத் துண்டுகளை ஒன்றுடனொன்று பொருத்தினார்கள். அக்காலத்திய பாதுகாப்புத் தரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இதன் கட்டுமானக் காலத்தில், உயர்த்திகளைப் பொருத்தும்போது, ஒரேயொரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இக் கோபுரம், அதன் உச்சியிலுள்ள, 20மீட்டர் உயரமுள்ள, தொலைக்காட்சி அண்டெனாவைச் சேர்க்காது, 300 மீட்டர்கள் (986 அடிகள்) உயரமானதும், 10,000 தொன்களிலும் (2 கோடியே 10 இலட்சம் இறாத்தல்) கூடிய நிறையை உடையதுமாகும். இது கட்டிமுடிக்கப்பட்ட காலத்தில், இதுவே உலகின் அதிக உயரமான அமைப்பாக இருந்தது. இதன் பராமரிப்புக்காக, ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 தொன்கள் கடும் மண்ணிறப் பூச்சு மை பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலைமாறும் போது, உருக்கு சுருங்கி விரிவதன் காரணமாக, ஈபெல் கோபுரத்தின் உயரத்தில் பல சதம மீட்டர்கள் வேறுபாடு ஏற்படுகின்றது.

இது கட்டப்பட்ட காலத்தில், எதிர்பார்க்கக் கூடியவகையில், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. பலர் இது பார்வைக்கு அழகாக இருக்காதென்றே கருதினார்கள். இன்று இது உலகிலுள்ள மிகக் கவர்ச்சிகரமான கட்டிடக்கலைகளுள் ஒன்று என்று கருதப்படுகிறது.

ஆரம்பத்தில், இக் கோபுரத்தை 20 ஆண்டுகள் அவ்விடத்தில் நிறுத்திவைப்பதற்கு ஈபெல் அனுமதி பெற்றிருந்தார், எனினும், தொடர்புகளுக்கு இது மிகவும் பெறுமதி மிக்கதாக இருந்ததனால், அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னும், கோபுரம் அங்கே நிற்க அனுமதிக்கப்பட்டது.

கட்டுமானம்

ஈபெல் கோபுரத்தின் அடித்தளம் 1887ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.கிழக்கு மற்றும் தெற்கு கால்கள் நேராகவும் மற்றும் ஒவ்வொரு காலும் 6 அடி 6 அங்குலம் உள்ள திண்ணமான சிமிட்டிப் பலகையில் நிறுத்தப்பட்டது. மற்ற இரு கால்களும், சேனி நதி அருகே இருந்ததால் ஒவ்வொன்றிக்கும் இரண்டு ஆழ் அடித்தளம் தேவைப்பட்டது.அவை அழுத்தப்பட்ட காற்று கேய்சான்கள் மூலமாக (49 X 20 X 22 அடி ) அமைக்கப்பட்டது. இந்த பலகையானது இரும்பு வேலைப்பாடுகளை(லாடம்) தாங்கக்கூடிய வளைந்த தலை உடைய சுண்ணாம்பு தொகுதியால் அமைக்கப்பட்டது.இந்த லடாமானது 25 அடி நீளமும் 4 அங்குலம் சுற்றளவும் கூடிய திருகு அச்சாணியால் இரும்பு வேலைப்பாட்டுடன் கோக்கப்பட்டது.

ஒவ்வொரு லாடமும் கற்களைக் கொண்டும், 10 செ.மீ (4 அங்குலம்) விட்டமும் 7.5 மீ நீளமும் (25 அடி) உடைய ஒரு சோடி பூட்டாணிகள் (Bolt) கொண்டு நிலைநிறுத்தப்பட்டது. அடிப்படைக் கட்டுமானம் ஜூன் 30 ஆம் தேதி நிறைவடைந்தது. பின்னர் இரும்புகளை தூக்கி நிறுத்தும் வேலைகள் தொடங்கப்பட்டன. நாம் காணக் கூடிய எழிலான இரும்புக் கோபுரத்திற்கு பின்னால் ஏகப்பபட்ட முன் தயாரிப்பு வேலைகளும் கடின உழைப்பும் அடங்கியுள்ளன.வரைபட அலுவலகமானது 1,700 பொது வரைபடங்களையும்,கோபுரத்திற்குத் தேவைப்படும் 18,038 பொருட்களின் 3,629 விரிவான வரைபடங்களையும் தயாரித்தது. வரைதல் மற்றும் வடிவமைப்பில் சிக்கலான கோணங்கள் மற்றும் துல்லியமான அளவுக் கூறுகளுடன் வரைவது மிகவும் சிக்கலானதாக இருந்தது.பொருத்தி முடிக்கப்பட்ட சில பகுதிகள் பாரிசின் புறநகர்ப்பகுதியான லெவல்லோஸ்-பெரெட்டிலுள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து குதிரை வண்டிகளில் கொண்டுவரப்பட்டன. துளையிடுதல் அல்லது வடிவமைத்தல் போன்ற எந்தவொரு வேலையும் கட்டுமான தளத்தில் செய்யவில்லை மாறாக ஏதாவதொரு பகுதியும் பொருந்தவில்லை என்றால், அதை மாற்றுவதற்கு தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது. மொத்தத்தில், இது 18,038 இரும்புத் துண்டுகள் 2.5 மில்லியன் அறையாணிகள் (rivrerts) பயன்படுத்தி சேர்ந்து ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள மாபெரும் கோபுரக் கட்டுமாணமாகும்.

மின்தூக்கிகள்

அரசின் ஆணைக்குழு மேற்பார்வையில் போதுமான பாதுகாப்பு வசதிகளுடன் பயணிகள் மின்தூக்கிகள் கோபுரத்தில் நிறுவப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் கோபுரத்தின் இரு நிலைகளுக்கும் செல்வதற்குரிய மின் தூக்கிகள் உள்ளன.கோபுரத்தின் முதல் நிலைக்குச் செல்வதற்குறிய மின்தூக்கிகளை கட்டமைக்க ரொக்ஸ், கம்பலுசீயர் மற்றும் லெபாபே (Roux, Combaluzier & Lepape) என்ற பிரெஞ்சு நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டன.அவை கோபுரத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கால்களில் இரண்டு நேரான மின்தூக்கிகளை அமைத்தன [1].ரொக்ஸ், கம்பலுசீயர் & லெபாபே நிறுவனம் இரு சோடி வளையாத இணைக்கப்பட்ட முடிவிலா சங்கிலிகளை பயணிகள் அமரும் பெட்டியுடன் பொருத்தினர். சங்கிலியின் மேல் அல்லது திரும்பிய பகுதிகளின் சில இணைப்புகள் அமரும் பெட்டியின் பெரும்பகுதி எடையை லாவகமாக எதிரீடு (counterbalanced) செய்கிறது. பெட்டியானது கீழிருந்து தள்ளப்படாமல் மேலிருந்து இழுக்கப்பட்டது.சங்கிலிகள் ஒன்றுடன் ஒன்று திருகிக்கொள்வதைத் தடுக்க முறுக்காற்றிகள் அல்லது கடத்தலி (conduit) பயன்படுத்தப்பட்டன. கீழ் பகுதியில் சங்கிலிகள் 3.9 மீ விட்டமுடைய பற்சக்கரத்தில் பொருந்திச் சுழலுமாறு செய்யப்பட்டுள்ளது. மேற்பகுதியில் சிறிய பற்சக்கரத்தைக் கொண்டு இது வழிநடத்தப்படகிறது.

கோபுரத்தின் வடக்கு மற்றும் தெற்கு கால்களில் பொருத்தப்பட்ட மின் தூக்கிகள்

துவக்கவிழா மற்றும் 1889 விரிவாக்கம்

1889 மார்ச் இறுதியில் ஈபெல் கோபுரத்தின் முக்கிய கட்டுமாண வேலைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து மார்ச் 31 ல் அரசாங்க அலுவலர் குழுக்கள் பல்வேறு செய்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் கோபுரத்தின் உச்சியில் விழா கொண்டாடப்பட்டது. மின்தூக்கிகள் அமைக்கப்படாத நிலையில் அனைவரும் படிக்கட்டுகள் வழியாக அழைத்தச்செல்லப்பட்டு கோபுரத்தின் பல்வேறு வடிவமைப்புகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. படிக்கட்டுகளில் நடந்து மேலே செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆனது.இதனால் பலர் முதல் தளத்திலேயே தங்கி விட அமைப்பு பொறியாளர் எமிலி நவ்குயிர், கட்டுமாண தலைவர் ஜீன் காம்பேகன் . பாரிசு நகரத் தலைவர் மற்றும் லீ பிகாரோ , லீ மான்டி இலுஸ்டர் பத்திரிக்கைகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மட்டும் மேல் கட்டுமாணம் வரை சென்றனர். பிற்பகல் 2.35 மணியளவில் 25 குண்டுகள் முழங்க பிரான்சின் மூவண்ணக்கொடி முதல் கட்டுமாணத் தளத்தில் ஏற்றப்பட்டது.

நிகழ்ச்சிகள்

ஜனவரி 12, 1908 ல், முதலாவது தொலைதூரத் தகவல் வானொலி கோபுரத்திலிருந்து அனுப்பப்பட்டது.

1929 ல், கிறிஸ்லெர் கட்டிடம் நியு யார்க்கில் கட்டி முடிக்கப்பட்டபோது, ஈபெல் கோபுரம், உலகின் அதி உயர்ந்த அமைப்பு என்ற பெயரை இழந்தது.

அடால்ஃப் ஹிட்லர், இரண்டாவது உலக யுத்தத்தின்போது, பாரிஸுக்கு விஜயம் செய்தபோது, அவர் 1792 படிகளையும், ஏறியே உச்சிக்குச் செல்லட்டும் என்பதற்காக, பிரெஞ்சுக்காரர் அதன் உயர்த்திகளைச் செயலிழக்கச் செய்தனர். அதனைப் பழுதுபார்க்கத் தேவைப்படும் உதிரிப்பாகத்தைப் பெற்றுக்கொள்வது, யுத்தச் சூழலில் முடியாது என்று கருதப்பட்டதெனினும், நாஸிகள் புறப்பட்டுச் சென்ற சில மணி நேரத்திலேயே அது செயல்படத் தொடங்கிவிட்டது. ஹிட்லர் கீழேயே நின்றுவிட்டுச் சென்றுவிட்டார்.

ஜனவரி 3, 1956 ல் தீயொன்றினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.

1959ல் தற்போதுள்ள வானொலி அலைவாங்கி அதன் உச்சியில் பொருத்தப்பட்டது.

தொடர்பாடல்

20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, வானொலி ஒலிபரப்பியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 1950 வரை, மின்கம்பி மூலமாகவே இணைக்கப்பட்டிருந்தது. 1909ம் ஆண்டு நெடுந்தொலைவு அலைபரப்பிகள், கட்டிடத்தின் அடியில் பதிக்கப்பட்டது. தெற்கு தூணிலிருக்கும் இந்த அலைபரப்பியை இப்பொழுதும் காணலாம். இன்று, இரு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் ஈபெள் கோபுரத்தின் மூலம் தங்கள் அலைவரிசைகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றது.

பண்பலை

அலைவரிசை kW சேவை நிறுவனம்
87.8 MHz 10 பிரான்சு இன்டர்
89.0 MHz 10 RFI பாரீஸ்
89.9 MHz 6 TSF ஜாஸ்
90.4 MHz 10 நாஸ்டல்கி
90.9 MHz 4 சான்ட் பிரான்சு

பிரதிபண்ணல்களும், போலிகளும்

ஈபெல் கோபுரத்தின் பிரதிகளை உலகம் முழுவதும் காணலாம் அவற்றுல் முக்கியமானவை சில:

  • டோக்கியோ, யப்பான் டோக்க்யோ கோபுரம் என அழைக்கப்படு இது ஈபெல் கோபுரத்தைவிட 13 மீட்டர் உயரமானதாகும்.(அளவு விகிதம் 1.04:1)

உலகின் உயரமான கோபுரங்கள்

பெயர் மொத்த உயரம் திறக்கப்பட்ட ஆண்டு நாடு நகர் குறிப்புகள்
டோக்கியோ ஸ்கை ட்ரி2,080 ft (634 m)2011சப்பான்டோக்கியோ
கியிவ் தொலைக்காட்சி நிலைய கோபுரம்1,263 ft (385 m)1973உக்ரைன்கியிவ்
தாசுகெந்த் கோபுரம்1,230 ft (375 m)1985உஸ்பெகிஸ்தான்தாசுகெந்த்
சவுசான் தீவு பாலத்தின் கோபுரம்1,214 ft (370 m)2009சீனக் குடியரசுசியாங்கயின்
யாங்சட் ஆற்றின் குறுக்கேயுள்ள பாலத்தின் கோபுரம்1,137 ft (347 m)2003சீனக் குடியரசுசியாங்கயின்
டிராகன் கோபுரம்1,102 ft (336 m)2000சீனக் குடியரசுஆர்பின்
டோக்கியோ கோபுரம்1,091 ft (333 m)1958சப்பான்டோக்கியோ
விட்டி தொலைக்காட்கி கோபுரம்1,078 ft (329 m)1962ஐக்கிய அமெரிக்காசோர்வுத், விஸ்கன்சின்
டபுள்யு.எஸ்.பி. தொலைக்காட்கி கோபுரம்1,075 ft (328 m)1957ஐக்கிய அமெரிக்காஅட்லான்டா, ஜார்ஜியா

பிரான்சிலுள்ள ஈபெல் கோபுரத்தைவிட உயரமான கோபுரங்கள்

பெயர் மொத்த உயரம் திறக்கப்பட்ட ஆண்டு கட்டிட வகை நகர் குறிப்புகள்
நெடுந்தொலைவு அலைபரப்பி 350 m (1,150 ft) 1974 உயர் கோபுரம் அலோயஸ்
எச்.டபுள்யு.யு அலைபரப்பி 350 m (1,150 ft) ? உயர் கோபுரம் ரோஸ்நே இராணுவ அலைபரப்பி
வியாதக் தி மில்லாவு 343 m (1,125 ft) 2004 பாலத்தின் தூண் மிலாவு
நியார்ட்-மைசோனே தொலைக்காட்சி கோபுரம் 330 m (1,080 ft) ? உயர் கோபுரம் நியார்ட்
மான்ஸ்-மாயத் அலைபரப்பி 342 m (1,122 ft) 1993 உயர் கோபுரம் மாயத்
லா ரெஜினே அலைபரப்பி 330 m (1,080 ft) 1973 உயர் கோபுரம் சாயிசாக் இராணுவ அலைபரப்பி
ரோமுலஸ் அலைபரப்பி 330 m (1,080 ft) 1974 உயர் கோபுரம் ரோமுலஸ்

காட்சியகம்

வெளி இணைப்புகள்

  1. Vogel, p. 28.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.