ஏ. கே. சி. நடராஜன்

ஏ. கே. சி. நடராஜன் தென்னிந்தியாவைச் சேர்ந்த கிளாரினெட் இசைக் கலைஞர் ஆவார்.

தொழில் வாழ்க்கை

தன் தந்தையிடமும், ஆலத்தூர் வெங்கடேசய்யரிடமும் நடராஜன் இசை பயின்றார். ஐரோப்பிய வாத்தியமான கிளாரினெட்டை நாதசுவரம் போன்று குழைவுடனும் சங்கதிகளுடனும் வாசிக்கும் இசை மேதையென நேயர்கள் கருதுகின்றனர்.[1]

லலிதா-பத்மினி-ராகினி சகோதரிகளில், நடிகை லலிதாவின் திருமணம் சென்னையில் நடந்தது; அத் திருமணத்தில் நடந்த ஏ. கே. சி. நடராஜனின் கிளாரினெட் இசை நிகழ்ச்சி, திருமணத்திற்கு வந்தோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.[2]

பெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும்

மேற்கோள்கள்

  1. 'விருது பெற்ற கலைஞர்கள்' எனும் தலைப்பிலமைந்த கட்டுரை (பக்கம் எண்: 88), தினமணி இசைவிழா மலர் (2008-2009)
  2. 'அதுதான் நாத வித்தை' எனும் தலைப்பிலமைந்த கட்டுரை (பக்கம் எண்: 10), தினமணி இசைவிழா மலர் (2008-2009)
  3. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.