எஸ் புதூர்
எஸ் புதூர் (செம்மாம்பட்டி புதூர் என்பதன் சுருக்கம்) (ஆங்கிலம்: S Pudur) தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்வட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றியம்.இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது.இங்கிருந்து மாநிலத்தின் முக்கிய பகுதிகலான திருச்சி,மதுரை,கோயம்புத்தூர்,புதுக்கோட்டை,பழனி மற்றும் திண்டுக்கல்லிற்கு பேருந்து வசதி உள்ளது.ஒன்றிய தலைநகராக இருக்கும் s.புதூருக்கு அருகில் உள்ள நகரம் பொன்னமராவதி ஆகும்.விவசாயம் பிரதானமாகயிருக்கும் இவ்வூரில் அரிச்சான்கண்மாய் புதியிகண்மாய் விரஞ்சான்கண்மாய் 3 பிரதாண நீர்தேக்கங்கள் இவ்வூர் விவசாயத்திற்கு நீரை வழங்குகிறது.இவ்வூரின் குடிநீர் தேவையை சீலப்பநாயக்கர் ஊரணி பூர்த்திசெய்கிறது இது தவிர ஊராட்சி ஆழ்துளை கிணறுகள் மூலம் இவ்வூரில் குடிநீர் விநியோகிக்கிறது. இவ்வூரில் பாண்டியன் கிராம வங்கி , இந்திய ஓவர்சீஸ் வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி செயல்பட்டுவருகின்றது. இவ்வூரில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் ஒன்று உள்ளது நேரிடைய[4][5][6][7]
எஸ் புதூர் | |
அமைவிடம் | 10°19′N 78°29′E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | J. ஜெயகாந்தன், இ. ஆ. ப. [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- http://tnmaps.tn.nic.in/default.htm?blocks.php?dcode=23
- http://tnmaps.tn.nic.in/district.php
- http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=23&blk_name=S%20Pudur&dcodenew=25&drdblknew=12
- http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=23&blk_name=S%20Pudur&dcodenew=25&drdblknew=12