எராஸ்மஸ்

ஏராஸ்மஸ் ரோட்டர்டாமில் பிறந்தார்.[1] இவர் டச்சு மற்றும் லத்தீன் இலக்கியங்களை இயற்றியவர். நூலகங்களைப் படிப்பதற்காகவே சமய துறவியானார். இவர் பாரிஸ் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் கலந்துரையாடி விளக்கம் பெற்றார். சர் தாமஸ் மூர், ஜான் கெலெட் போன்ற மானிட மரபாளர்களுடன் தொடர்புகொண்டவர்.

எராஸ்மஸ்
இளைய ஆன்சு கோல்பினால் வரையப்பட்ட எராஸ்மசின் புகைப்படம் (1523)
முழுப் பெயர்எராஸ்மஸ்
பிறப்புc. அக்டோபர் 28, 1466(1466-10-28)
ராட்டர்டேம் அல்லது கௌடா, பர்கிண்டிய நெதர்லாந்து
இறப்பு12 சூலை 1536(1536-07-12) (அகவை 69)
பேசெல், பழைய சுவிசு குடியரசு
பிற பெயர்கள்Desiderius Erasmus Roterodamus, Erasmus of Rotterdam
காலம்மெய்யியல் மறுமலர்ச்சி
பகுதிமேற்குலக மெய்யியல்
முக்கிய ஆர்வங்கள்கிறித்தவ மெய்யியல்
மானுட மறுமலர்ச்சி
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
ஏராசுமசிய உச்சரிப்பு

படைப்புகள்

மொழிபெயர்ப்பு நூல்கள்

  • கிரேக்க மொழியில் எழுதப்பட்ட பைபிளின் புதிய ஏற்பாட்டுக்கு லத்தீன் மொழியில் உரை விளக்கம் எழுதியுள்ளார்.
  • சிசரோ யூரிபிடஸ், லூசியன், ஆகியோரது நூல்களை மொழிபெயர்த்தார்.

பிற

  • இவரது உரையாடல்கள் (Colloquies) புகழ்பெற்றவை
  • ஏழு நாட்களில் எழுதி முடித்த மடமையை புகழ்ந்து நூலில் கிறிஸ்துவ துறவிகள், திருச்சபை நீதிபதிகள், போப்பாண்டவர்கள், ஆகியவற்றை மையப்படுத்தி நையாண்டி விளக்கமளித்துள்ளார்.
  • கிறிஸ்துவ இளவரசனுக்கான கல்வி என்ற நூலில் போர்களை தவிர்த்தல், சொத்து குவிப்பை விழாக்கள், மடங்களுக்கு பதில் பள்ளிகளை பெருக்கல், பற்றி வலியுறுத்தியுள்ளார்.
  • அமைதி பற்றிய முறையீடு என்ற நூலில் போரின் நிறை குறைகளை விவாதித்துளார்.

மேற்கோள்

  1. Latourette, Kenneth Scott. A History of Christianity. New York: Harper & Brothers, 1953, p. 661.
  • க. வெங்கடேசன், வி. சி. பதிப்பகம், ராஜபாளையம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.